நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 November, 2022 2:12 PM IST
Will Tamil Nādu government declare as a national disaster district?

நேற்று மழைக் காரணமாக வெள்ளம் ஏற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பல பகுதிகளுக்கு சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமில்லாமல் உதவித் தொகையும் வழங்கினார். தற்போது, அவரிடம் மற்றும் ஒர் கோரிக்கையை விவசாயிகள் வைத்துள்ளனர்.

காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்வரிடம் அளித்த மனுவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு நஞ்சை நிலங்கள் 80 சதவீதம் பாதித்ததோடு, அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் வீணாகிவிட்டன. இந்நிலையில் விவசாயிகள் மீது கருணை உணர்வுடன் உதவிக்கரம் நீட்டி அவர்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்திட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்.

முதல்வரிடம் டெல்டா  மாவட்ட விவசாய சங்க தலைவர் இளங்கீரன் அளித்த மனுவில்,  சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி  உள்ளதால், இதனை காப்பாற்றுவதற்கு உடனடியாக ஏக்கர் ஒன்றுக்கு 1 மூட்டை  யூரியா, ஒரு மூட்டை டிஏபி, பொட்டாஷ் உரங்களை மானியமாக வழங்க வேண்டும். முழுமையாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம்  இழப்பீடாக வழங்க வேண்டும். சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் இந்த மாத  மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு இன்சூரன்ஸ்  கட்டுவதற்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

இவ்வாறு இருக்க அரசின் முடிவு என்ன? அரசு விவசாயிகளின் கோரிக்கை ஏற்று தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்குமா என்கிற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளன.

மேலும் படிக்க:

மலர்கள் சாகுபடி ரூ.60,000 வரை மானியம்

PM Kisan திட்டம் பயன்பெற e-kyc புதுப்பிக்க காலக்கெடு தேதி அறிவிப்பு!

English Summary: Will Tamil Nādu government declare as a national disaster district?
Published on: 15 November 2022, 02:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now