News

Saturday, 10 July 2021 12:32 PM , by: T. Vigneshwaran

Common Civil Law

நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என தில்லி உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்தியாவில் சிவில் சட்டம் மற்றும் கிரிமினல் சட்டம் என்று இரண்டு வகையான சட்டங்கள் உள்ளன.  கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கையில், சிவில் சட்டம் பொதுவானதாக இல்லை.

பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தினால், இந்திய குடிமக்கள் அனைவர்க்கும் திருமணம், சொத்து, விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒரேவிதமான சட்டம் ஒழுங்கு இருக்கும். இப்போது, பின்பற்றப்படும்  மதம் சார்ந்த சட்டங்கள் செல்லாது.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் (Indian Constitution) 44-வது பிரிவு, பொது சிவில் சட்டத்தை பரிந்துரைப்பதோடுமட்டுமல்லாமல் பாஜக தனது தேர்தல் வாக்குறுதியிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதியை வைத்தது.

இதுதொடர்பான வழக்கு மீண்டும் நேற்று தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரதிபா எம். சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கிடையில், நவீன இந்திய சமூகம் சிறிதாக மாறி மதம், சமூகம் மற்றும் சாதியின் பாரம்பரிய தடைகளை களைந்து, ஒரே விதமாக முன்னேறி வருகிறது. மாறிவரும் இந்த சூழ்நிலைகளை பார்க்கும்போது, நாட்டில், ஒரு பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன். இதை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு கட்டாயம் எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

 பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கும் நிலையில், பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் மழைக்கால கூட்டத் தொடரில் இது நிறைவேற்றப்படுமா என்பதை பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க:

தமிழகத்தில் தொடங்கபட்ட பேருந்து சேவையில் புதிய திருப்பங்கள்

தமிழகத்தில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாடு:சென்னையில் தடுப்பூசி முகாம் இல்லை- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

புதிய அணை கட்டிப்புயலைக் கிளப்பிய கர்நாடக அரசு - வேதனையில் தமிழக விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)