News

Tuesday, 15 June 2021 08:21 PM , by: R. Balakrishnan

Credit : Indian Express

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலை அள்ளி, அத்துரனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடி (Mango Cultivation) செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் மாம்பழங்கள் பாலக்கோடு, காரிமங்கலம், வெள்ளிச்சந்தை பகுதிகளில் உள்ள மாங்காய் மண்டிகளுக்கும், மாங்கூழ் (Mango Juice) தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

விலை வீழ்ச்சி

கொரோனா ஊரடங்கு (Corona Curfew) காரணமாக ஒரு சில மாங்கூழ் தொழிற்சாலைகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. மண்டிகள் மூடப்பட்டுள்ளதால் மாம்பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பெங்களூரா, அல்போன்சா, பீத்தா், நீலம், பங்கனப்பள்ளி, செந்தூரா உள்ளிட்ட மாங்காய்கள் டன் ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாம்பழங்கள் அறுவடை (Harvest) செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காரணமாக மண்டிகள் திறக்காததால் மாம்பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மாங்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் மிக குறைந்த விலைக்கே மாம்பழங்களை கொள்முதல் செய்கின்றன.

மாம்பழத்திற்கு தரத்திற்கு ஏற்ற விலை கிடைக்காததால் மா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசு மாம்பழம் டன் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

மண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்!

வெளிமாநிலங்களில் தேவை அதிகரிப்பு! இளநீர் விலை உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)