மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 September, 2021 8:05 PM IST
Women can apply for Army Examination

தேசிய ராணுவம் மற்றும் கடற்படை அகாடமிக்கான நுழைவுத் தேர்வு எழுத, திருமணம் ஆகாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்' என, யு.பி.எஸ்.சி., நேற்று அறிவித்துள்ளது.

இரண்டு முறை

என்.டி.ஏ., எனப்படும் தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கிறது. யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த தேர்வுகளை நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான இரண்டாவது தேர்வு நவ., 14ல் நடக்கிறது. தகுதியுடைய நபர்கள் அக்., 8 வரை 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

ராணுவம் மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த திருமணம் ஆகாத ஆண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.இதை எதிர்த்து, வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், ராணுவ அகாடமி தேர்வு எழுத தகுதி வாய்ந்த பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை சமீபத்தில் பிறப்பித்தது.

'ஆன்லைன்'

இதையடுத்து, 'தேர்வு எழுத தகுதியுடைய பெண்கள் அக்., 8 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 'விண்ணப்ப பதிவுக்கு பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை' என, யு.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது.

மேலும் படிக்க

BYJU'S நிறுவனத்தின் அசத்தல் திட்டம்: குழந்தைகளுக்கு இலவச கல்வி!

இறந்த செல்களை புதுப்பிக்கிறது இசை தெரபி!

English Summary: Women can apply for Army Entrance Examination: UPSC Notice
Published on: 25 September 2021, 08:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now