மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 October, 2019 6:30 PM IST

மனித வாழ்விற்கு அடிப்படை உணவு, உடை, உறைவிடம்... முதன்மையாக இருக்கும் இந்த உணவிற்கு ஒரு தினம், ஆம் இன்று உலக உணவு தினம். இந்நாளை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசித்திருப்போம். ஒரு சிலர் புதிய பதார்த்தத்தை முயற்சிப்பார்கள், ஒரு சிலர் அவர்களின் விருப்ப உணவை விரும்பிய இடத்தில உண்ண யோசித்திருப்பார்கள், ஒரு சிலர் அசைவ உணவை  உண்ண உத்தேசித்து இருப்பார்கள். நான் சொல்வது சரிதானே?

இன்று உடலில் தோன்றும் பல விதமான நோய்களுக்கு முலக்காரணமாக இருப்பது நமது வாழ்வியலும், உணவு முறையும் என்பது மறுக்க முடியாத ஒன்று. சித்தர்கள் உணவு முறை பற்றி கூறும் போது, ' உணவே மருந்து, மருந்தே உணவு '  என்ற முறையில் உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதுமட்டுமல்லாது  மூன்று  வேளையும் வகை வகையான உணவு பதார்த்தங்களை தவிர்த்து, வாழ்நாளை அதிகரிக்க இயற்கை உணவு வகைகளையும், நீர் உணவையும் அருந்தி வந்தால் நோயின்றி  நீண்ட நாள் வாழலாம் என்கிறார்கள்.

இன்று நம்மில் பெரும்பாலானோரும் இயற்கை உணவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர் என்பது ஒரு ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம் ஆகும். இயற்கை உணவை சமைத்து உண்பது, பச்சையாக உண்பது என எவ்வாறு வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். தற்போது சமைத்து சாப்பிடும் உணவை தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் உணவு முறையை பின்பற்றி வருகிறார்கள்.

உணவு விதிகள்

  • எந்த உணவாக இருந்தாலும் அதிக நேரம் சமைக்க கூடாது. இல்லையென்றால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.
  • துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
  • மிஞ்சிய உணவை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உண்பதை ஒரு போதும் செய்யாதீர்கள்.
  • கூடுமான வரை மண் பாத்திரம், செம்பு பாத்திரம், இரும்பு பாத்திரம் போன்றவற்றில் உணவு சமைப்பதை பழக்கமாக்குங்கள்.
  • அறுசுவையும் அளவோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

Anitha Jegadeesan
krishi Jagran

English Summary: World Food Day 2019: ‘Our Actions Are Our Future Healthy Diets for A Zero Hunger World’
Published on: 16 October 2019, 06:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now