மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 June, 2019 3:20 PM IST

புதிய கல்வி கொள்கை பல்வேறு பரிந்துரைகளை திட்ட வரைவில் தெரிவித்துள்ளது. 484 பக்கங்களை கொண்ட அந்த வரைவில் பாட திட்டத்தில் தேவையான மாற்றம்  ஆகியன விரிவாக பரிந்துரைக்க பட்டுள்ளது. அதில் ஒரு கருத்தாக குறைந்து வரும் இந்தியா ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை ஆகும்.

இந்தியாவில் அறிவியல், மருத்துவம், உளவியல் போன்ற துறைகளில் போதிய அளவு வல்லுநர்கள் இல்லை என்பது வருந்த தக்க செய்தியாகும். உலக அறிவு சார்த்த அமைப்பு (World Intellectual Property Organisation ) வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் 1 லட்சம் பேர்களில் வெறும் 15 நபர்கள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு ஆகும்.

ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கையில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது. 1 லட்சம் பேர்களில் 825 பேர் உள்ளனர், அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது.  இங்கு 1 லட்சம் பேர்களில் 423 பேர் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். அனைத்து துறையிலும் நம்முடன் போட்டியிடும் சீனாவில் கூட 111 என்ற அளவில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதற்கு பல நாடுகள் விண்ணப்பிக்கின்றன.  காப்புரிமை பெறுவதில் சீனா முதலிடத்தில் உள்ளது, இது வரை 13 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கொடுக்க பட்டுள்ளன. இந்தியாவில் வெறும் 47 ஆயிரத்து 57 விண்ணப்பங்கள் கொடுக்க பட்டுள்ளன, அதிலும் 70% விண்ணப்பங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாகும்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஆராய்ச்சியாளர்கள் மிகவும் அவசியமாகும். இது போன்ற விகித சாரம் நாட்டிற்கு பேராபத்து ஆகும் என உலக மையம் கூறியுள்ளது. இந்தியா  போன்ற வரும் நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் குறைவாக இருப்பது வருந்ததக்கதாக  உள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கையில் இதனை திருத்தும் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மையங்கள், புதிய கன்டுபிடிப்புகள் ஆகியவற்றை அமைப்பதற்கான பரிந்துரை செய்ய பட்டுள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: World Intellectual Property Organisation Reveals Scientist Ratio: New Education Policy Suggests More Scientist
Published on: 11 June 2019, 03:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now