News

Monday, 07 September 2020 03:21 PM , by: Daisy Rose Mary

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரின் லனார்க் வேளாண் மையத்தில், ஆண்டுதோறும் செம்மறி ஆடுகளை ஏலம் விடும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்திற்கு, பிறந்து ஆறு மாதங்களே ஆன, 'டெக்சல்' வகையைச் சேர்ந்த செம்மறி ஆடு ஒன்று, கொண்டுவரப்பட்டது.

'டெக்சல் ராம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆடு, 3.58 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு ஏலத்தில் போயுள்ளதால், இந்த செம்மறி ஆடு, 'இரட்டை வைரம்' Double Dinamod என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த, 2009- ஆம் ஆண்டு செம்மறி ஆடு ஒன்று, 2.3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அதுவே அதிகபட்ச விலையாக இது வரை இருந்து வந்தது. இந்நிலையில், இந்த டெக்சல் வகை செம்மறி ஆடு, அதை விட அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது, உலக சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

டெக்சல்' வகை செம்மறி ஆடு அதிக விலைக்கு விற்கப்படுவதற்கான காரணம், அதன் முழுமையான நிறமான, சரியான தலை மற்றும் மென்மையான தங்க நிறம், என்று அனைத்தும் கவனிக்கத்தக்கதாக இருந்தாக சொல்லப்படுகிறது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த இந்த வகை டெக்சல் செம்மறி ஆடுகள் அதன் ரோமம் மற்றும் இறைச்சிக்காகவே பலரும் வாங்குவர். இதன் ரோமங்கள், உள்ளாடை நூல்களுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன

மேலும் படிக்க...

PM Kisan முறைகேடு: 13 மாவட்டங்களில் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை!!

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)