மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 May, 2019 6:07 PM IST

உலக வர்த்தக அமைப்பிற்கான 12 வது,  அமைச்சர்கள் மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் மொத்தம் 22 நாடுகளை சேர்த்த அமைச்சர்கள் பங்கு கொள்கின்றனர். 12 வளரும் நாடுகளும், 6 பின்தங்கிய வளர்ச்சி கொண்டுள்ள நாடுகளும் இதில் கலந்து கொண்டுள்ளன.

இரண்டு நாள் மாநாட்டில் முக்கியம்சமாக வர்த்தகம் மேம்பாடு மற்றும் எதிர் கொள்ளும் சவால்கள் ஆகியன விவாதிக்க பட உள்ளது. மேலும் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், அதனை தீர்க்கும் உபாயங்கள் குறித்தும் பேசப்பட உள்ளனர்.

முதல் நாள் மாநாட்டில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று 22 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் முக்கிய விவாதமாக வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகள் வர்த்தக ரீதியாக எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் என்பனவாகும்.

சீனா, பிரேசில், சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி , கசகஸ்தான், பங்களாதேஷ் போன்ற உறுப்பு நாடுகள் பங்கேற்றுள்ளன.  உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ராபர்டோ அஸிவேடோ அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

மாநாட்டினை துவக்கி வைத்து பேசிய நமது வர்த்தக துறை அமைச்சர் Dr.அனுப் வாதவன், உலக வர்த்தகத்தில் எதிர் கொள்ளும் புதிய சவால்கள்,  புதிய விதிமுறைகள், தடைகள் ஆகியன முக்கியம்சமாக விவாதிக்க படும் என்றார்.  

பின்தங்கிய நாடுகளை சேர்த்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் தாங்கள் எதிர்க்கொள்ளும் பொதுவான வர்த்தக ரீதியான பிரச்சனைகள்,  வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் ஆகியன விவாதிக்க படுகின்றன.

English Summary: WTO Ministerial Conference Held In Delhi: 22 Countries Are Participating: Discuss About Multilateral Rule-Based-Trading
Published on: 14 May 2019, 06:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now