மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 September, 2018 10:28 PM IST

கிளாகோமா எனப்படும் கண்திரவ அழுத்த நோய், பார்வையை பறிக்கக் கூடியது. கண் திரவ அழுத்தத்தை தணிக்க, மஞ்சள் கிழங்கிலுள்ள, 'குர்குமின்' என்ற பொருள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


ஆனால், குர்குமின் எளிதாகக் கரையாது. எனவே, கிளாகோமா நோயாளிக்கு, குர்குமின், நல்ல பலன் தரவேண்டும் என்றால், தினமும், 24 மாத்திரைகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும். அத்தனை குர்குமின் உடலில் கலந்தால், பக்க விளைவாக, வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும். இதைத் தவிர்க்க, லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லுாரியைச் சேர்ந்த மருத்துவர்கள், குர்குமினை நேரடியாக கண்ணில் விடும் சொட்டு மருந்து வடிவில் தயாரித்து உள்ளனர். இது கண் எரிச்சலையோ, வீக்கத்தையோ உண்டாக்காது என்றும், கிளாகோமா உள்ள கண்ணிலேயே கலக்கப்படும் போது, விரைவான முன்னேற்றம் கிடைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


எலி சோதனைகளில் நல்ல பலன் கிடைத்திருப்பதால், விரைவில் மனிதர்களுக்கான கண் சொட்டு மருந்து சோதனையை துவக்கவிருப்ப தாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

English Summary: Yellow to protect your eyes
Published on: 17 September 2018, 10:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now