News

Monday, 17 September 2018 10:28 PM

கிளாகோமா எனப்படும் கண்திரவ அழுத்த நோய், பார்வையை பறிக்கக் கூடியது. கண் திரவ அழுத்தத்தை தணிக்க, மஞ்சள் கிழங்கிலுள்ள, 'குர்குமின்' என்ற பொருள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


ஆனால், குர்குமின் எளிதாகக் கரையாது. எனவே, கிளாகோமா நோயாளிக்கு, குர்குமின், நல்ல பலன் தரவேண்டும் என்றால், தினமும், 24 மாத்திரைகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும். அத்தனை குர்குமின் உடலில் கலந்தால், பக்க விளைவாக, வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும். இதைத் தவிர்க்க, லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லுாரியைச் சேர்ந்த மருத்துவர்கள், குர்குமினை நேரடியாக கண்ணில் விடும் சொட்டு மருந்து வடிவில் தயாரித்து உள்ளனர். இது கண் எரிச்சலையோ, வீக்கத்தையோ உண்டாக்காது என்றும், கிளாகோமா உள்ள கண்ணிலேயே கலக்கப்படும் போது, விரைவான முன்னேற்றம் கிடைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


எலி சோதனைகளில் நல்ல பலன் கிடைத்திருப்பதால், விரைவில் மனிதர்களுக்கான கண் சொட்டு மருந்து சோதனையை துவக்கவிருப்ப தாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)