மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 August, 2020 9:56 AM IST
Crecit : Khyber news

தங்க நகைகளுக்கு இனி வங்கிகளில் 90 சதவீதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் சந்தை நிலவரம், பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பிறகு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை

அதன்படி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை , தற்போது இருக்கும், 4 சதவீத வட்டி என்ற நிலையையே தொடர இருப்பதாகவும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நகைக் கடன்களுக்குக் கூடுதல் பணம்

தங்கநகை அடமான கடனில், தங்கத்தின் மதிப்பில், 90 சதவீதம் அளவுக்குக் கடன் வழங்க (Gold and jewellery, to be granted up to 90 per cent of the pledged value) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருக்கும் குடும்பங்கள், சிறு வணிகர்கள், தொழில்முனைவோர்கள் பயன் பெறுவார்கள். இந்த சலுகை, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வழங்கப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது, 75 சதவீதம் அளவுக்கு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

ரெப்போ வட்டி மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை

ரெப்போ வட்டி (Repo Rate) விகிதம் 4 சதவீதமாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்மூலம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி (Reverse Repo rate) விகிதம் 3.35 சதவீதமாக தொடர்கிறது.

குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) பெற்ற கடனை மறுசீரமைப்பு செய்ய வங்கிகளுக்கு ரிசர்வு வங்கி அறிவுறுத்தியுள்ளது. வீட்டு வசதி துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், தேசிய வீட்டு வசதி வங்கிக்கு (National Housing Bank), 5,000 கோடி ரூபாய் கூடுதல் நிதி வசதி வழங்கப்படும்

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்களுக்கான நிதி இருப்பை அதிகரிக்க, நபார்டுக்கும் (NABARD) 5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது, மேலும் ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் வகையில், இணைய வசதி இல்லாமலே, கார்டுகள் மற்றும் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி, பணப்பரிவர்த்தனைகளை (retail payments using your card or mobile phone) மேற்கொள்ளும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் படிக்க... 

ஒகேனக்கல் அருவி பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் - விவசாயிகள் வேதனை!!

குறுவை நெல் சாகுபடியில் தமிழகம் சாதனை - தமிழக அரசு!!

 

English Summary: You can now borrow up to 90 percent of value pledged against Gold and Jewellery Says RBI
Published on: 07 August 2020, 09:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now