மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 June, 2021 7:24 PM IST
Credit : Dinamalar

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கை முன்னெடுத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், சிலர் ஊரடங்கை பயனுள்ள வகையில் நற்காரியங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இளைஞர்கள் ஒன்று கூடி, மரக்கன்றுகளை (Saplings) நட்டு ஊரடங்கை பயனுள்ளதாக்கி உள்ளனர்.

மரக்கன்றுகள் நடுதல்

கொரோனா ஊரடங்கை (Corona Curfew) பயனுள்ளதாக மாற்றும் வகையில், கிராமம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்கும் பணியில், இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணலுார் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்தனர். அதற்காக உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். மழை வளம் பெருகவும், வருங்காலத்தில் ஆக்சிஜன் (Oxygen) தட்டுப்பாட்டால் மனித சமுதாயம் இடர்பாடுகளை சந்திக்காத வகையிலும், கிராமம் முழுதும், தென்னை, பனை, புளி, மா, புங்கன் என, 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

பராமரிப்பு

ஊரடங்கால் பள்ளி, கல்லுாரி மாணவர்களும், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களும், வெட்டியாக பொழுதை போக்கி வந்தோம். இப்படி பொழுதை கழிப்பதை விட, இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என முடிவு செய்து, மரக்கன்றுகளை நட துவங்கியுள்ளோம். மரக்கன்றுகள் நடுவதோடு இல்லாமல், தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோம். மரங்கள் (Trees) வளர்ப்பது, எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இளைஞர்கள் கூறினர்.

மேலும் படிக்க

சூறாவளி காற்று வீசியதால் 250 ஏக்கர் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன!இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை

கொரோனா நோயாளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள்!

English Summary: Young people planting saplings to make curfew effective!
Published on: 01 June 2021, 07:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now