Others

Tuesday, 14 June 2022 11:32 AM , by: Elavarse Sivakumar

சமூக பாதுகாப்பு பென்சன் பெற்றுவந்தவர்களில் இறந்துபோன ஓய்வூதியதாரர்களை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது. இதனால் இவர்களுக்கு இனி பென்சன் கிடையாது.

சமூக பாதுகாப்பு பென்சன்

ஓய்வு காலத்தைக் கருத்தில்கொண்டு, சமூகத்தின் சிலத் தரப்பினருக்கு அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதாவது முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலமில்லா வேளாண் தொழிலாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், இலங்கை அகதிகள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பு பென்சன் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.200 கோடி

இந்நிலையில், சமூக பாதுகாப்பு பென்சன் பெற்றுவந்த ஓய்வூதியதாரர்களில் இறந்துபோன 1.73 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாயை சேமிப்பாக மாறுகிறது.

தகுதி இல்லாதவர்கள்

மேலும், தமிழகத்தில் 6147 பேருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த பென்சனை வருவாய் துறை நிறுத்தியுள்ளது. இதுபோக, ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி இல்லாத 18,656 பேரின் விவரங்களை தமிழ்நாடு அரசு சரிபார்த்து வருகிறது. ஆதார் அட்டை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு பதிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

வாழ்நாள் சான்றிதழ்

மத்திய, மாநில அரசு பென்சன் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று. இதன் வாயிலாக ஓய்வூதியதாரர் தொடர்ந்து பென்சன் பெறுவது உறுதிசெய்யப்படும்.

நடைமுறை

ஆனால், சமூக பாதுகாப்பு பென்சன் வாங்குவோரிடம் வாழ்நாள் சான்றிதழ் கேட்கப்படுவதில்லை. எனவே, அரசு தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டு, ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருக்கிறார்களா, பென்சன் பெறுவோர் தகுதி பெற்றவர்களா என்பது கண்டறியப்படும். இந்நிலையில், இறந்துவிட்ட 1.73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், தகுதியில்லாத 18,656 நபர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் சேமிப்பாகிறது.

மேலும் படிக்க...

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாடப் பழக்கங்கள்!

நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)