Others

Monday, 31 October 2022 10:59 AM , by: Elavarse Sivakumar

கர்நாடகா, உத்தரபிரதேசம் உட்பட 4 மாநில அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3 முதல் 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த முடிவு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், அதனை உடனே தங்கள் ஊழியர்களுக்கும் வழங்க சில மாநில அரசுகள் முன்வருவது வழக்கம்.

அந்த வகையில், மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய உடனேயே, அசாம், ஹரியானா, ஒடிசா, மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அதன் 7வது ஊதியக் குழு பரிந்துரையின்படி தங்கள் மாநில ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தின.

அரசுகள் முடிவு

இதன் தொடர்ச்சியாக தற்போது கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் தற்போது அகவிலைப்படியை 4% உயர்த்த முடிவு செய்துள்ளன. இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதேநேரத்தில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் அடுத்த டிஏ உயர்வை எதிர்பார்த்துள்ளனர்.

அதிகரிக்க வாய்ப்பு

அறிக்கையின்படி அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு  அகவிலைப்படியை  3 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க...

இந்த எருமையின் விலை ரூ.35 கோடி- பாதாம், பிஸ்தாதான் உணவு!

100% மானியத்தில் உளுந்து சாகுபடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)