மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 March, 2023 1:38 PM IST
7th Pay Commission: 4% hike in employee allowances! Govt approved!!

அரசு ஊழியர்கள் தங்களின் அகவிலைப்படி உயர்வு எப்பொழுது அடையும் என பல நாட்களாக எண்ணிக்கொண்டு இருந்தனர். அவ்வாறு இருந்த ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்தது. அத்தகைய அகவிலைப்படி 4% அதிகரிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) ஆகியந அதிகரித்தன. இத்தகைய அறிவிப்பினை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியீடு செய்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 4 சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக அரசு அறிவித்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து இருக்கிறார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டு முறை அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும். அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (DA) ஒவ்வொரு ஆண்டும் திருத்தம் செய்யப்படும். டிஏ மற்றும் ஊதிய உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்பதால், மார்ச் 31ம் தேதிக்குள் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் அகவிலைப்படியினை(DA) மத்திய அரசு திருத்துவது வழக்கமான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் இந்த உயர்வு கணக்கிடப்படுகிறது. அரசு தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் CPI-IW தரவு குறித்த விள்ளக்கங்களை வெளியிடுகிறது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியினைக் கணக்கிடுவதற்கான பரிந்துரைக்கப்பட்ட ஃபார்முலா இதுவே ஆகும்.

மத்திய அரசு ஊழியர்கள் இந்த முறை அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வை எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அது உறுதியாகி இருக்கிறது. ஓய்வூதியதாரர்கலுக்கான அகவிலைப்படியும் 4% உயர்ந்து உள்ளது.

அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க வகையில், ஒரு ஊழியரின் சம்பள மேட்ரிக்ஸில் உள்ள அளவினைப் பொறுத்து அகவிலைப்படி மாற்றம் அடையும்.

மேலும் படிக்க

பழங்குடியின விவசாயிகளுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிப்பு!

புதிய இ-சேவை மையங்கள் தொடங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்க!

English Summary: 7th Pay Commission: 4% hike in employee allowances! Govt approved!!
Published on: 25 March 2023, 01:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now