நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 September, 2021 6:42 PM IST
Bribery in getting government jobs in Tamil Nadu

அரசு அலுவலகங்களில், குறிப்பாக இ-சேவை மையங்கள் மற்றும் வருவாய் மற்றும் பதிவுத் துறையில் ஊழல் மலிந்து கிடப்பதை கணக்கெடுப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அரசு சேவைகளில் ஊழலை தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது,  ஆனாலும் என்ஜிஓ கணக்கெடுப்பு ஒன்று நிதர்சன நிலவரத்தை சுட்டி காட்டியுள்ளது. மாதிரி சேவை உரிமை மசோதாவையும் ஊழல் எதிர்ப்பு என்ஜிஓ அறப்போர் இயக்கம் வெளியிட்டது.

இந்த NGO நடத்திய மதிப்பாய்வில், தமிழகத்தில் அரசு சேவைகளைப் பெறுவதில் லஞ்சம், தாமதம் மற்றும் செயல்பாட்டில் இணக்கம் இல்லாதது மிகப்பெரிய தடையாக இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்களில், குறிப்பாக இ-சேவை மையங்கள் மற்றும் வருவாய் மற்றும் பதிவுத் துறையில் ஊழல் மலிந்து கிடப்பதை இந்த கணக்கெடுப்பு அம்பலமாகியுள்ளது.

வழங்கப்பட்ட தரவுகளின்படி, தமிழ்நாட்டில் வருவாய் மற்றும் பதிவுத் துறையில் அதிக ஊழல் இருப்பதாக என்ஜிஓ கணக்கெடுப்பு தகவல்களை வழங்கியுள்ளது. மேலும் அறப்போர் இயக்கம் சேவை பெறும் உரிமை சட்டம் மாதிரி மசோதாவையும் வெளியிட்டது.

கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில் 93 சதவீதம் லஞ்சம் கொடுக்கும்படி கெட்டவர்கள், 82% பேர் சேவையை அணுகும் அனுபவத்தில் அதிருப்தி அடைந்தனர். பதிலளித்தவர்களில் 84% சேவை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான முறையீடுகளை சுயாதீன ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள். தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களின் பட்டியலைத் தயாரிக்க உதவும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது, ஆட்சிக்கு வருபவர்கள், சேவை உரிமை சட்டத்தை (Right to Service Act) நிறைவேற்ற வேண்டும் என்ற வாக்குறுதியை இந்த அறப்போர் இயக்கம் தெரிவித்தது. இந்தக் கோரிக்கையை போட்டியிட்ட அனைத்து கட்சிகளிடமும் இந்த இயக்கம் கோரியது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெற்றிபெற்ற திமுக இந்த அறிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. தமிழக ஆளுநரின் தொடக்க உரையில், இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பற்றியும் கூறியது. 

அரசு சேவைகளில் ஊழலை தடுக்க வேண்டும் என்பதற்கான  மசோதாவை இந்த என்ஜிஓ தன்னார்வலர்கள் தற்போது தொகுத்து வெளியிட்டனர்.  கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருக்கும் சட்டங்களின் சிறப்பம்சங்களை கருத்தில் கொண்டு இந்த மாதிரி மசோதா தயார் செய்துள்ளது.

மேலும் படிக்க:

கல்லூரி மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் 2 கொரோனா தடுப்பூசி?

சிலிண்டர் விலை உயர்வு! 1000 ரூபாயில் விற்பனை?

English Summary: Bribery in getting government jobs in Tamil Nadu! The biggest hurdle?
Published on: 01 September 2021, 06:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now