Others

Saturday, 18 September 2021 05:31 PM , by: R. Balakrishnan

Free Education for Kids

நிடி ஆயோக் அமைப்புடன் இணைந்து 112 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு 'ஆன்லைன்' வாயிலாக இலவச கல்வி வழங்க 'பைஜூஸ்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இலவச கல்வி

நம் நாட்டில் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண், நீர் வளம், உள்கட்டமைப்பு, நிதி, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியடைய முடியாமல் பல சவால்களை சந்திக்கும் மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க, நாட்டின் பிரபலமான கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நிடி ஆயோக் அமைப்புடன் இணைந்து 112 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச கல்வி வழங்க பைஜூஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான திட்டங்களை வரையறுக்க, குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

இதேபோல் சிறந்த 3,000 மாணவர்களுக்கு, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்காக தயார் படுத்தும் பயற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்: விஞ்ஞானி எச்சரிக்கை

63 வயதில் நீட் தேர்வு எழுதிய முன்னாள் தலைமை ஆசிரியர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)