மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 May, 2022 5:05 PM IST

மக்களின் சொந்த வீடுக் கனவை நனவாக்க, மத்திய அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வீட்டுவசதி திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு, சொந்த வீடு வாங்கத் திட்டமிடுவோருக்கு பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு வசதி திட்டம்

நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மானியத்தோடு வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கிறது.

உயரும் தொகை

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு விரைவில் ரூ.2 லட்சம் வழங்கப்படவிருக்கிறது. அதாவது இப்போது வழங்கப்படும் தொகையை விட மூன்று மடங்கு தொகை கூடுதலாக வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. வீடுகள் கட்டும் செலவு அதிகரித்துள்ளதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் உதவித் தொகையை உயர்த்தி வழங்க ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்தது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்ட நான்கு லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் இதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் செலவுகள்

மணல், சிமென்ட், கம்பிகள், செங்கல் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாக, கிராமப்புறங்களில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது.

ரூ.4 லட்சம் உதவி

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள் தங்கள் தரப்பிலிருந்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கொடுக்க முடியாது என்று விவாதிக்கப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் விலையை ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

English Summary: Central government provides Rs 4 lakh to build a house!
Published on: 27 May 2022, 10:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now