மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 May, 2022 11:38 AM IST
Do you want your child to get used to horse riding? Happy news!

சென்னை மெரினா கடற்கரையில் குழந்தைகளுக்கான குதிரை சவாரி பள்ளி விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி), சி சைலேந்திர பாபு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பிஎஃப்ஏ) உடன் இணைந்து இந்தத் திட்டத்திற்கான முன்முயற்சியை எடுத்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னையில் உள்ள புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் குழந்தைகளுக்கான குதிரை சவாரி பள்ளி விரைவில் தொடங்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 100 குதிரைகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி), சி. சைலேந்திர பாபு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பிஎஃப்ஏ) உடன் இணைந்து இந்தத் திட்டத்திற்கான முயற்சியை எடுத்துள்ளார். ஆர்வமுள்ள குதிரை சவாரி செய்யும் சைலேந்திர பாபு, இந்த யோசனையை முன்வைத்துள்ளார். இந்த திட்டம் நிறைவேறினால், இப்போது மெரினா கடற்கரையில் மகிழ்ச்சி சவாரிக்குப் பயன்படுத்தப்படும் 100 குதிரைகள் குழந்தைகளுக்குக் குதிரை சவாரி செய்வதற்கான அடிப்படைகளைக் கற்பிக்க இணைக்கப்படும்.

மெரினா கடற்கரையில் உள்ள அம்மன் சமாதிக்குப் பின்புறம் அமைந்துள்ள இந்திய கடலோர காவல்படையின் 3 ஏக்கர் நிலமும், எழும்பூரில் உள்ள மாநில போலீஸ் குதிரை லாயம் அருகே அமைந்துள்ள ஒரு நிலமும் ஜாய் சவாரி குதிரைகளுக்கான தொழுவங்கள் கட்ட பரிசீலிக்கப்படுகிறது.

மெரினா கடற்கரையில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் பல குதிரைகள் கோவிட் -19 காரணமாக லாக்டவுன் காலத்தில் உரிமையாளர்களால் உணவளிக்க இயலாததால் பட்டினியாலும், பல உடல்நலக்குறைவு காரணமாகவும் இறந்தன. இன்று சவாரிக்குப் பயன்படுத்தப்படும் பல குதிரைகள் திறந்த வெளியில் சுற்றித் திரிகின்றன. அதோடு, தங்குமிடம் இல்லாததால், கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் குதிரை சவாரி பள்ளிகளுக்கு புதிய குதிரைகளை அனுமதிக்கக்கூடாது என்றும், மெரினா கடற்கரையில் தற்போதுள்ள 100 குதிரைகளை இதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிஎஃப்ஏ அதன் அலுவலக பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

PFA இன் இணை நிறுவனர் ஷிரானி பெரேரா IANS கூறுகையில், "குதிரைகளுக்கு தங்குமிடம் கோரி நாங்கள் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தோம். இதன் அடிப்படையில் குதிரைகளுக்குத் தற்காலிகத் தங்குமிடம் சென்னை சிவானந்தாசாலையில் உள்ள வெகுஜன விரைவு போக்குவரத்து அமைப்புக்குக் கீழே ஏற்பாடு செய்யப்பட்டது. சேப்பாக்கம் எம்.எல்.ஏ. குதிரைகளுக்கு குடிநீர் வழங்க உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சவாரிக்கு பயன்படுத்தப்படும் விலங்குகள் மைக்ரோ சிப் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், குதிரை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி உரிமம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மெரினா கடற்கரையில் குதிரை சவாரி பள்ளி வருவதால், குதிரைகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு பிரச்சினை தீர்ந்து, குதிரை சவாரியின் நுணுக்கங்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியும். பல மாதங்களுக்கு முன் பிஎஃப்ஏ மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டத்திற்கு மாநில காவல்துறை மற்றும் டிஜிபியின் ஆதரவு வலுவூட்டியுள்ளது.

மேலும் படிக்க

டெல்டா விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து!

English Summary: Do you want your child to get used to horse riding? Happy news!
Published on: 22 May 2022, 11:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now