Others

Friday, 28 January 2022 08:01 AM , by: Elavarse Sivakumar

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இராமேஸ்வரம் கோயிலில் காலியாக உள்ள 66 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இராமநாதபுரம் மாவட்டம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில், காலியாக உள்ள தட்டச்சர், காவலர், டிக்கெட் விற்பனையாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்பத் தகுதியான இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தட்டச்சர் (Typist)

காலியிடங்கள் : 2

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 18,500 – 58,600

டிக்கெட் விற்பனையாளர்

காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ. 18,500 – ரூ.58,600

காவலர் (Security)

காலியிடங்கள்
24

கல்வித் தகுதி (Educational Qualification)

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்.

சம்பளம் (Salary)

ரூ. 15,900 – ரூ.50,400

தூர்வை

காலியிடங்கள் 20

கல்வித் தகுதி (Educational Qualification)

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 10,000 – 31,500

துப்புரவு பணியாளர்

காலியிடங்கள் : 10

கல்வித் தகுதி (Educational Qualification)

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்.

சம்பளம்(Salary)

ரூ. 10,000 – ரூ.31,500

வயதுவரம்பு (Age limit)

01.02.2022 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி (Address)

இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம் – 623526, இராமநாதபுரம் மாவட்டம்.

காலக்கெடு (Deadline)

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

குளிருக்காகப் பற்ற வைத்தஅடுப்பு- பறிபோன 5 உயிர்கள்!

கண்ணத்தில் அறைந்த மணமகன்- கல்யாணத்தை நிறுத்திய மணமகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)