மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 December, 2022 3:17 PM IST
Government employees

மத்திய அரசு ஊழியர்களுக்கு வர வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகை ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் செலுத்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்த மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், எவ்வளவு அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம்.

அகவிலைப்படி உயர்வு (DA Hike)

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இதனால், பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது. இதை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதாவது ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். கடைசியாக, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்து அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கடந்த மார்ச் மாதமும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அகவிலைப்படி நிறுத்தம்

2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கியபோது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை அகவிலைப்படி நிறுத்திவைக்கப்பட்டது. இந்த 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை இன்னும் அரசு ஊழியர்களுக்கு செலுத்தப்படாமல் உள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழிந்தபின்னும் அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றி அரசு முடிவெடுக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், அடுத்த கேபினட் கூட்டத்தில் அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றி அரசு ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை செலுத்தப்படும்போது, மூன்றாம் நிலை ஊழியர்களுக்கு 11,880 ரூபாய் முதல் 37,554 ரூபாய் வரை நிலுவைத்தொகை கிடைக்கும். 13ஆம் நிலை அல்லது 14ஆம் நிலை ஊழியர்களுக்கு 1,44,200 ரூபாய் முதல் 2,15,900 ரூபாய் வரை அகவிலைப்படி நிலுவைத்தொகை கிடைக்கும்.

மேலும் படிக்க

பொங்கல் பரிசு ரூ.1000 ரேசன் கடையில் தான் கொடுக்கப் போறாங்க: ஆலோசிக்கும் அரசு!

மீண்டும் பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்.!

English Summary: Good News for Government Employees: Allowance Pay Dues Coming Soon!
Published on: 12 December 2022, 03:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now