நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 October, 2022 8:02 AM IST
Senior citizens

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அக்டோபர் 31அம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால், இம்மாத இறுதி வரை சீனியர் சிட்டிசன்கள் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கி பயன்பெற முடியும்.

பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கியபோது சீனியர் சிட்டிசன்கள் நலன் கருதி எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தின. இத்திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டது. சீனியர் சிட்டிசன்கள் பெரும்பாலும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களிலேயே முதலீடு செய்கின்றனர். எனவே, ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக சுமார் 0.50% வட்டி கூடுதலாக வழங்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காலத்தில் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறைந்தன. எனவே சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி, ஐசிஐசிஐ வங்கியும் கோல்டன் யெர்ஸ் ஃபிக்சட் டெபாசிட் (ICICI Golden Years FD) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.60% வட்டி வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அக்டோபர் 7ஆம் தேதியுடன் கோல்டன் யெர்ஸ் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் முடிவுக்கு வருவதாக ஐசிஐசிஐ வங்கி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ஐசிஐசிஐ கோல்டன் யெர்ஸ் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் அக்டோபர் 31ஆம்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, சீனியர் சிட்டிசன்கள் அக்டோபர் 31ஆம் தேதி வரை இத்திட்டத்தில் கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

மேலும் படிக்க

பென்சனர்களுக்கு புதிய வசதி: இனி எல்லாமோ ரொம்ப ஈசி தான்

English Summary: Good News For Senior Citizens: The Scheme Is Extended Till October 31!
Published on: 12 October 2022, 08:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now