Others

Thursday, 21 April 2022 11:02 AM , by: Elavarse Sivakumar

திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 24 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் வேலை என்பது மட்டுமல்ல, அதிலும் வருவாய்த்துறையில் வேலைபார்க்க வேண்டும் என நினைப்பவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதுவும் குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்.

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள் : 24

கல்வித் தகுதி (Educational qualification)

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ.15,700 – ரூ.50,000

வயதுத் தகுதி (Age limit)

  • 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • இருப்பினும் அரசு விதிகளின் படி, SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை(How to apply)

இந்த பணியிடங்களுக்குப் விண்ணப்பிக்க

https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/04/2022041367.pdf

என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி (Address)

மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அ-பிரிவு, அறை எண் 224. இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பல்லடம் ரோடு திருப்பூர் – 641604

விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)

15.05.2022

மேலும் படிக்க...

முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!

நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)