மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 May, 2022 5:54 PM IST
Tamil Nadu: Free training for Group 4 examination....

இது தொடர்பாக தமிழக அரசு அளித்த அறிக்கையில்,24-07-2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பனி தேர்வுகள் -IV தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தால் கட்டணமில்லாப் பயிற்சி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நத்தனத்தில் உள்ள அரசினார் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 வரை வாராந்திர வேலை நாட்களில் மூன்று மாத காலம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இல்லை. மேலும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரியிலும், நத்தனில் உள்ள அரசு ஆண்கள் கலைக் கல்லூரியிலும் முறையே 500 மற்றும் 300 தேர்வர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்.

தகுதி:

குறைந்தபட்சம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வயது மற்றும் இதர தகுதிகள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது:

பயிற்சி பெற விரும்புவோர் அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சி மைய இணையதளமான http://www.civilservicecoaching.com/ மூலம் 11-05-2022 வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு எந்த திருத்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பதாரர்கள் 24.07.2022 அன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

அழைப்பு கடிதம்:

இதற்கான அழைப்புக் கடிதம் அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட அழைப்புக் கடிதம், சேர்க்கையின் போது பதிவிறக்கம் செய்து கொண்டு வரப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை தேதி மற்றும் நேரம் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

அழைப்பு கடிதம் அஞ்சல் மூலமாக அனுப்பபடாது.

தேர்வு முறை:

பத்தாம் வகுப்பு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அவரவர் இனம் சார்ந்த இடங்களுக்கு ஏற்ப அவர்கள் விரும்பும் பயிற்சி மையத்தில் நேரடியாகப் பயிற்சி பெற அழைக்கப்படுவார்கள்.

வகுப்பு நேரம்:

வாராந்திர வேலை நாட்களில் மதியம் 02.00 மணி முதல் 05.00 மணி வரையில் மட்டும் மாணவர்கள் பயிற்சிக்கு வந்து செல்லும் வகையிலும் மற்றும் இதற்கான பயணப்படிகள் வழங்கப்படாது.
இதற்கான வருகை பதிவு மிகவும் அவசியம்.

பயிற்சி சேர்க்கை இடஒதுக்கீடு:

இன ஒதுக்கீடு விவரங்கள்

பொது -31%
பின்தங்கியவர்கள்- 26.5 %
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்- 3.5%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் - 20%
ஆதிதிராவிடர் - 15%
அருந்ததியர் - 3%
பழங்குடியினர் - 1%
மொத்தம் - 100%

மேலும் தகவலுக்கு, ceccchennai@gmail.com என்ற பயிற்சி மைய மின்னஞ்சல் முகவரியைப் பார்க்கவும். நீங்கள் உதவிக்கு 044-24621475 / 24621909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு சிவில் சர்வீஸ் பயிற்சி (http://www.civilservicecoaching.com/)

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (https://ecampus.cc/CompetitiveExaminations/)

மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது: தமிழகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள்

900+ மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: Government of Tamil Nadu: Free training for Group 4 examination!
Published on: 02 May 2022, 05:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now