நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 March, 2023 4:16 PM IST
India's First Free Medical College!

இந்தியாவின் முதல் இலவச மருத்துவக் கல்லூரியில் ஐந்தாண்டுகள் படித்து, டாக்டரானால், ஐந்தாண்டுகள் ஏழைகளுக்கு சேவையாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், தாங்கள் தேர்வு செய்யும் தொழில் வழியை தொடரலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

கர்நாடகாவில் உள்ள முத்தெனஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி சென்ற வாரம் திறந்து வைத்தார். இந்தியாவின் முதல் மற்றும் முற்றிலும் இலவச மருத்துவக் கல்லூரி என்று இது அழைக்கப்படுகிறது. இங்கு மாணவர்கள் கட்டணம், விடுதி மற்றும் உணவுக் கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், இது ரூ. 400 கோடி செலவில் அமைக்கப்பட்டு, சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களால் நிறுவப்பட்டுள்ளது.

பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளைப் போலவே, ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், விடுதிகள், ஆடிட்டோரியம், பணியாளர்கள் குடியிருப்புகள் மற்றும் விளையாட்டு வசதிகளைத் தவிர, ஒரு இலவச மருத்துவமனை மற்றும் ஒரு கல்வித் தொகுதி சார்ந்த கல்வியைக் கொண்டுள்ளது. அதன் மொத்த பரப்பளவு 325,000 சதுர அடி என்று இது கூறப்படுகிறது.

யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்றாலும், இதன் முதன்மை இலக்கு என்பது குடும்பத்தில் முதல் தலைமுறை கற்பவர்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவில் இருந்து பின்தங்கிய மாணவர்களுக்கு இடமளித்தல் எனக் கூறப்படுகிறது. இதில் சேர விரும்பும் மாணவர் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூன் 2023-24 ஆம் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாங்கள் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளையும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என மருத்துவ நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.மேலும் அவர் கூறுகையில், "எந்தவொரு கட்டுப்பாடும் பந்தமும் இருக்காது என்றாலும், மாணவர்கள் மருத்துவரான பிறகு, ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சேவை செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும், "அவர்கள் இங்கு ஐந்து வருடங்கள் படித்து ஒரு டாக்டரானால், அவர்கள் ஐந்து வருடங்கள் ஏழைகளுக்கு சேவை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க

 TNPSC-இல் புதிய மாற்றங்கள்! அமைச்சர் அறிவிப்பு!

மக்களே நற்செய்தி! சரிந்தது தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

English Summary: India's First Free Medical College!
Published on: 28 March 2023, 04:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now