நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 December, 2021 3:47 PM IST
Innovative law to prevent young people from smoking cigarettes

நியூசிலாந்தின் வெலிங்டனில், சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்த நுாதன சட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.

தென்மேற்கு பசிபிக் பிராந்திய நாடான நியூசிலாந்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே சிகரெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் அமலில் ஏற்கனவே உள்ளது. இதை, 14 வயதாக குறைக்கும் புதிய சட்டம், அடுத்த ஆண்டு அமலுக்கு வருவதாக, நியூசி., அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், சிகரெட் விற்பனைக்கான வயது குறைந்துக் கொண்டே வரும் வகையில் இந்த சட்டத்தில் புதுமையான அம்சம் இடம் பெற்றுள்ளது. அதாவது, 2022ல், 14 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே சிகரெட் விற்பனை செய்யப்படும். இது, 2023ல், 15 வயதாகவும், 2024ல், 16 ஆகவும் உயர்ந்து கொண்டே வரும் என நியூசி அரசு திட்டமிட்டுள்ளது.

புகைப்பிடிப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆபத்தான ஒன்று தான். இருப்பினும், நியூசி அரசு இளைஞர்கள் மீது கவனம் செலுத்துவதின் அவசியம் என்ன? ஏனென்றால், அவர்கள் நிகழ் காலத்தை விட வருங்காலம் முக்கியம் என நினைக்கின்றனர். எனவே தான் இளைஞர்களை கருத்தில்கொண்டு இந்த புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளது.

இந்த சட்டத்தால் இளைஞர்கள் சிகரெட் பிடிப்பதை உடனடியாக தடுக்க முடியாது என்றாலும், ஆண்டுகள் செல்லச் செல்ல, இளைஞர்கள் சிகரெட் பிடிப்பது குறையும்.

உதாரணமாக, இந்த சட்டம் அமலுக்கு வந்து, 65 ஆண்டுகள் ஆன பின், 80 வயதானவர்கள் மட்டும் தான் சிகரெட்டை வாங்க முடியும் என மாற வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அரசு சிகரெட் பழக்கத்தை தடுக்கும் வகையில், சிகரேட் விற்பனைக்கு அதிக வரிகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக சிகரெட் பிடிப்போர் சதவீதம், 11 சதவீதமாக குறைந்திருக்கிறது.

தினமும் சிகரெட் பிடிப்போர் சதவீதம், 9 சதவீதமாக சரிவடைந்து காணப்பட்டது. ஆகவே வருங்காலத்தில் நாட்டில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து அறவே ஒழிக்க, புதிய சட்டம் வழி வகுக்கும் என, நியூசி, அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

TVS Jupiter ஸ்கூட்டர் 30 ஆயிரம் ரூபாயில்! 64KM மைலேஜ் தரும்! விவரம்!

மலிவான விலையில் சிறந்த மைலேஜ் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

English Summary: Innovative law to prevent young people from smoking cigarettes
Published on: 10 December 2021, 03:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now