Others

Saturday, 29 October 2022 10:57 AM , by: Elavarse Sivakumar

தாங்கள் ஆட்சியமைத்தால் பழைய பென்சன் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களின் மிகப் பெரிய கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டம்தான்.

 

தமிழகத்தில் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று CPS ஒழிப்பு அமைப்பினரும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்களும் நீண்ட காலமாகவே தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மவுனம்

ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிதி நிலையைக் காரணம் காட்டி இத்திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகக் காரணம் கூறி வருகின்றனர்.

வாக்குறுதி

இந்நிலையில், இமாசலப் பிரதேசத்தில் தேர்தல் வாக்குறுதியாக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். காங்க்ரா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி பழைய பென்சன் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.

பிஜேபி அரசு இந்த விஷயத்தில் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதாகவும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் உறுதியாக அமல்படுத்தும் என்று அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஆர்.எஸ்.பாலி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க...

PM-kisan பயனாளிகள் பட்டியல் - அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!

மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.12,000!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)