Others

Tuesday, 21 December 2021 07:08 PM , by: R. Balakrishnan

New born baby protectioned by dogs

சத்தீஸ்கர் மாநிலத்தில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில், வயல்வெளியில் கிடந்த பச்சிளங்குழந்தையை இரவு முழுதும் பாதுகாத்த நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குழந்தையை பாதுகாத்த நாய்கள்: (Dogs Protect The child)

சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டம் லோர்லி நகரின் அருகிலுள்ள சரிஸ்தல் என்ற கிராமத்தில், நேற்று காலை சிலர் விவசாய பணிகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சற்று தூரத்தில் நாய் ஒன்று குறிப்பிட்ட இடத்தை மட்டும் சுற்றி சுற்றி வந்து குரைத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து குழந்தை அழுகுரலும் கேட்டது.

கிராம மக்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கு ஏழு குட்டி நாய்களுக்கு மத்தியில், பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் அழுதபடி கிடந்தது. கிராம மக்களுக்கு பரிதாபத்தை விட பெரும்
ஆச்சரியம் ஏற்பட்டது. இரவு முழுதும் அந்தக் குழந்தையை தன் குட்டிகளுடன் சேர்த்து, அந்த நாய் பாதுகாத்து இருப்பதை உணர்ந்தனர்.

குழந்தை மீட்பு

அந்தக்குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு அகான்ஷா என்று கிராம வாசிகள் பெயர் சூட்டி உள்ளனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையுடன் நாய்க் குட்டிகள் இருக்கும் படத்தை ஏராளமானோர் சமூக
வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க

விலை குறைவால் பூண்டை தீயிட்டு எரித்த விவசாயி!

நவீன வசதிகளுடன் தனியார்ப் பள்ளிகளை மிஞ்சும் அரசுப் பள்ளி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)