Others

Wednesday, 06 July 2022 05:19 PM , by: Poonguzhali R

Peak price of small onions!

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சென்ற மாதம் வரை 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனையான சின்னவெங்காயம் விலை இப்போது உயர்வு அடைந்து 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கலில் வெங்காயத்திற்கு எனத் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் தனியான சந்தையே நடைபெற்று வருகின்றது. திண்டுக்கல் மாவட்டத்தினைச் சுற்றியுள்ள வேடசந்தூர், தாராபுரம், திருப்பூர், தேனி, ஒட்டன்சத்திரம், கம்பம் முதலான பல ஊர்களில் இருந்து விவசாயிகள் விளைவித்த வெங்காயத்தை இந்த சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருவார்கள். இந்த சந்தைக்குக் கொண்டு வரக்கூடிய வெங்காயங்களைத் தமிழகம் மட்டுமன்றிக் கேரளா வெளிமாநில மாவட்ட வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கிச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:  TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!

சில மாதங்களாகத் தமிழகத்தில் வெங்காய வரத்து அதிகமாகக் காணப்படுவதால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. 15 தினங்கள் முன்பு வரை தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களான மைசூர், ஆந்திரா போன்ற பல இடங்களிலிருந்தும் கிட்டத்தட்ட 500 டன் அளவில் வரத்து இருந்ததால் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையாகியது.

மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!

இந்நிலையில் 4 மாத காலமாக ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருந்தது, அரசு. ஆனால், தற்போது வெளி நாடுகளான மலேசியா, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் 15 தினங்கள் முன்பு வரை 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம் இப்போது 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகி வருகிறது.

மேலும் படிக்க: தமிழக அரசு: நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கத் தேவையில்லை!

இத்தகைய விலை உயர்வால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர். ஏற்றுமதி அனுமதியைத் தொடர்ந்து இவ்வாறே நீட்டித்தால் மேலும் சின்ன வெங்காயத்தின் விலை ஏற்றம் அடைய வாய்ப்புகள் இருக்கிறது என விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க

மேட் இன் தமிழ்நாடு: உலகம் எங்கிலும் செல்ல நடவடிக்கை!

இனி முகக் கவசம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)