மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 January, 2022 1:16 PM IST
Government Employees insurance scheme

அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன் மற்றும் மகளை, அவர்களின் வயது வரம்பை கருத்தில் கொள்ளாமல், மருத்துவ காப்பீட்டு (Medical Insurance) திட்டத்தில் இணைக்க, தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ காப்பீட்டு திட்டம் (Medical Insurance Scheme)

அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் 25 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் சேர்க்கப்பட்டனர். காப்பீட்டு தொகை, ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், 'பிரிமீயம்' தொகை, 300 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

அரசாணை (Government Order)

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 25 வயதுக்கு மேற்பட்ட பணியில் இல்லாத, திருமணமாகாத மகன் மற்றும் மகள்களையும் சேர்க்கும்படி, அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்களை, வயது வரம்பை கருத்தில் கொள்ளாமல் சேர்க்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலை இல்லாத குழந்தைகள், உயர் கல்வி கற்கும் குழந்தைகள், திருமணமாகாத, சட்டப்படி விவகாரத்து பெற்ற மகள்கள், மனநிலை சரியில்லாத குழந்தைகள் போன்றோர், அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெறலாம். இதற்காக, 1.09 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

அனைவருக்கும் மிகவும் அவசியமானது ஆயுள் காப்பீடு பாலிசி!

PF கணக்கில் இ-நாமினேஷன் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

English Summary: Permission to include son and daughter in government employee insurance scheme!
Published on: 05 January 2022, 01:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now