Others

Sunday, 26 June 2022 04:21 PM , by: Poonguzhali R

Phone with 15000mAh battery in Rs. 8000 only!

ஹாட்வேவ் W10 ரக்கட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது 15000mAh பேட்டரி கொண்டது. அதோடு, ரூ. 8000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த மேலும் அதிகத் தகவலை இப்போது பார்க்கலாம்.

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!

இந்த ஸ்மார்ட்போன் ராணுவ தரத்தால் ஆன டியுரபிலிட்டி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சம் இதில் உள்ள 15,000mAh பேட்டரி தான். இந்த ஸ்மார்ட்போன் 1200 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது. இது தவிர இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் HD+ டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கோர் பிராசஸர் முதலான அம்சங்கள் உள்ளன.

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் பேஸ் அன்லாக் வசதி உள்ளது. புகைப்படங்களை எடுக்க டூயல் கேமரா செட்டப், 13MP பிரைமரி கேமரா லென்ஸ் மற்றும் 5MP செல்பி கேமரா யூனிட் இருக்கிறது.

மேலும் படிக்க: முட்டை விலை அதிரடி உயர்வு! மக்கள் அவதி!!

போனின் சிறப்பு அம்சங்கள்

6.53 இன்ச் HD+ 120x1600 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர்
13MP பிரைமரி கேமரா
இரண்டாவது கேமரா சென்சார்
5MP செல்பி கேமரா
4GB ரேம்

மேலும் படிக்க: ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!

32GB மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ரிவர்ஸ் சார்ஜிங்
MIL-STD810H சான்று
15000mAh பேட்டரி
18 வாட் வயர்டு சார்ஜிங்
கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
IP68 மற்றும் IP69K தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

மேலும் படிக்க: 10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!

விலை என்ன?

புதிய ஹாட்வேவ் W10 ஸ்மார்ட்போன் அலி எக்ஸ்பிரஸ் தளத்தில் நாளை முதல் (ஜூன் 27) விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 99.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை தான் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 11 ஆயிரம் என மாறி விடும். இந்த ஸ்மார்ட்போன் கிரே மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை எனத் தெரிகிறது.

மேலும் படிக்க

மாதம் ரூ. 1000 திட்டம்: ஒரு நாளில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகை!

ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)