அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 16 July, 2022 11:53 AM IST
Pregnant Women Can Get Identification Number Online!


கர்பிணிப் பெண்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

தமிழகத்தில் பேறு காலக் கண்காணிப்பு இணையதளமான பிக்மி (TN PICME) கர்ப்பிணிகளின் கர்ப்பக் கால விவரங்களைப் பதிவு செய்தல் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதத்தினைக் குறைப்பதற்கான நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பிக்மி (TN PICME) இணையதளம் ஏபரல் 2008-இல் தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 11 லட்சம் தாய்மார்களின் தகவல்கள் பிக்மி இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை! இன்றே விண்ணப்பியுங்க!!

 

தாய்மார்களுக்கு தஇஏ எண் என்ற தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுகிறது. இதன் மூலம் கர்ப்பப் பதிவு முதல் குழ்ந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரை தாய்சேய் நலச் சேவை விவரங்கள் பிக்மியில் பதிவு செய்யப்படுகின்றது. தமிழக அரசால் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்குத் தாய்மார்களுக்கு அடையாள எண் அவசியமாக்கப்பட்டுள்ளது. தற்போது கிராமச் சுகாதாரச் செவிலியர் மூலம் கர்ப்பப் பதிவு செய்து அடையாள எண் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிக்க்கத்தக்கது.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!

இந்த நிலையில், தாய்மார்கள் அடையாள எண் பெறுவதை மேலும் எளிதாக்கும் பொருட்டு picme.tn.gov.in இணையதளத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் தாங்களே சுயப் பதிவு செய்து கொள்ளலாம். அதன் மூலம் அடையாள எண் பெறும் வசதி கடந்த மே மாதம் 27-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அடையாள எண் சுயப் பதிவு வசதி தொடங்கப்பட்ட நாள் முதல் ஜூன் 30 வரை 230 கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்விணையதள வசதியைப் பயன்படுத்தித் தங்கள் கர்ப்பத்தினைச் சுயப் பதிவு செய்து தங்களுக்கான தனிப்பட்ட அடையாள எண் பெற்றுள்ளனர்.

அனைத்துக் கர்ப்பிணி தாய்மார்களும் எவ்வித சிரமமும் இல்லாமல் தங்களுக்கான தனிப்பாட்ட அடையாள எண்ணைச் சுயப் பதிவு வசதியைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயப் பதிவு பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்கு யூடியூப் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!

ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!

English Summary: Pregnant Women Can Get Identification Number Online!
Published on: 16 July 2022, 11:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now