மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 August, 2021 4:34 PM IST
New ration cards

ரேசன் கார்டுகள் இல்லாத பழங்குடியினர் குடும்பத்திற்கு ரேஷன் கார்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க உயர் மதுரை நீடுதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • பொது விநியோகத் திட்டம் அனைவருக்கும் உணவு
  • அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் , 4,000 ரூபாயையும், 14 பொருட்களும்
  • ரேசன் கார்டு இல்லாத காரணத்தால் இந்த நிவாரணத்தை பெற இயலவில்லை

தமிழகத்தில் ரேசன் கார்டுகள் இல்லாத பழங்குடியினர் குடும்பத்திற்கு ரேசன் கார்டுகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க பழங்குடியின நலத்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவர் உயர் நீதிமன்றதில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 1.5 சதவிகிதம் மக்கள் பழங்குடியினர் இருக்கின்றன. தமிழகத்தில் 36 பழங்குடியினர் மற்றும் துணை பழங்குடியின இனங்கள் வாழ்கின்றன. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பழங்குடியின மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து மனஉளைச்சலில் உள்ளனர்.

தமிழக அரசு கொரோனா நிவாரண தொகையாக, 4 ஆயிரம் ரூபாயையும், 14 முக்கிய சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வழங்க கூறியது. ஆனால், பழங்குடி இனத்தை சேர்ந்த பல மக்கள் ரேசன் கார்டு இல்லாத காரணத்தால் இந்த வசதிகளை பெற முடியவில்லை. தமிழகத்தின் பொது விநியோகத் திட்டம் அனைவருக்கும் உணவு கிடைப்பதை, குறிப்பாக ஏழை மக்கள் உணவு பெறுவதை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டது.

ஆனால், பழங்குடியின மக்கள் பலர் ரேசன் கார்டு இல்லாததால் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன் பெற வில்லை. எனவே, பழங்குடியினர் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு ரேசன் கார்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி துரைசாமி அமர்வு, “மனுதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் புதிதாக மனு அளிக்கவும், அதன்படி, முறையாக ஆய்வு செய்து ரேசன் கார்டுகள் இல்லாத பழங்குடியினர் குடும்பத்திற்கு, ரேசன் கார்டுகளை வழங்க தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் பிடிக்க:

Ration card: அரசு அளிக்கும் நன்மையை பெற ரேஷன் கார்டில் மாற்றமா?

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!

English Summary: Ration card: New ration cards? Coming soon!
Published on: 24 August 2021, 04:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now