நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 June, 2022 8:10 AM IST

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களின் வரம்பை இருமடங்காக உயர்த்தி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி இனி முதல் நிலை (Tier-I) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்க முடியும்.

இதேபோல், இரண்டாம் நிலை (Tier-II) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1.4 கோடி ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடன் வரம்பு

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இம்மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கொள்கை கூட்ட அறிவிப்புகள் ஜூன் 8ஆம் தேதி வெளியானபோது, கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கிஅதிகாரப்பூர்வமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவிப்பு

இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டில்தான் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்பட்டது. அண்மையில் வீடுகளின் விலை உயர்ந்து வருவதாலும், வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அபராதம் கிடையாது

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வீட்டுக் கடன்களை முன்பாகவே செலுத்தி முடிப்பதற்கு கட்டணம் (foreclosure charges) அல்லது அபராதம் வசூலிக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடனை அடைப்பதற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை கொடுக்கலாம். இவ்வாறு ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரேஷன் அட்டை ரத்து கிடையாது- அட்டைதாரர்களுக்கு நிம்மதி!

செல்லாதக் காசைக் கொடுத்துக் கார் வாங்கிய தமிழன்!

English Summary: RBI raises credit limit for co-operative banks
Published on: 25 June 2022, 08:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now