Others

Monday, 13 December 2021 05:22 AM , by: R. Balakrishnan

Reserve Bank warns

அதிக வட்டி கிடைக்கும், முதலீட்டுக்கு அதிகப் பணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது அதிக ஆபத்தானதாகவும் முடியலாம். அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி (RBI) கவர்னர் சக்தி காந்த தாஸ் எச்சரித்து உள்ளார்.

RBI எச்சரிக்கை (RBI Warns)

முதலீட்டாளர்கள் தொடர்பான கருத்தரங்கு டில்லியில் நேற்று நடந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் பேசியதாவது: வங்கிகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யும்போது பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் (Awareness) இருக்க வேண்டும். அதிக வட்டி கிடைக்கும் என கூறப்படும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிக வட்டி எப்போதும் அதிக ஆபத்தானது என்பது நம் அனுபவம்.

அதனால் அவ்வாறு கூறும் அமைப்புகள், நிறுவனங்கள் குறித்து முழுமையாக அறிந்து எச்சரிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டும். வங்கி துறை தற்போது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு அனைவரும் இணைந்து செயல்படுவதே காரணம். வங்கிகளும், ரிசர்வ் வங்கியும், அரசும் இணைந்து செயல்படும்போது கூட்டுப் பொறுப்பாக அமைந்து விடுகிறது.

பொருளாதார வளர்ச்சி (Economic Growth)

இந்தக் கொரோனா காலத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட்டதால் தான் நம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியும் முக்கிய காரணமாக அமைகிறது.

மேலும் படிக்க

மானியத்தில் 150 லட்சம் வரை கடன் - சிறப்பு தொழில் கடன் மேளா!

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அதிர்ஷ்டம்: லாட்டரியில் ஒரு கோடி பரிசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)