நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 February, 2022 10:31 AM IST

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியப் பணம் வந்துள்ளது. அதை எவ்வாறு சரிபார்ப்பது, மானியம் வராவிட்டால் என்ன செய்வது போன்ற விவரங்களை அனைவருமேத் தெரிந்து கொள்வது அவசியம்.

ரூ.2.67 லட்சம் மானியம்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 'அனைவருக்கும் வீடு’ என்ற இந்த கனவுத் திட்டத்தைத் தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதல்முறையாக வீடு வாங்கும் போது ரூ.2.67 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

குற்றச்சாட்டு

பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நிறையப் பேருக்கு மானியம் வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. விண்ணப்பிக்கும் போது தவறான தகவல்களை படிவத்தில் நிரப்புவதால் மானியம் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான மிக முக்கியமான நிபந்தனை என்னவென்றால், விண்ணப்பதாரர் முதல் முறையாக ஒரு வீட்டை வாங்குபவராக இருக்க வேண்டும். இந்த நிபந்தனை மீறப்பட்டால் அவருக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.

தகுதி

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிதியுதவியைப் பெற, அரசாங்கம் குடும்ப வருமானத்தை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது:
அவை, ரூ.3 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம். இதில் வேறுபாடு இருந்தாலும் மானியம் கிடைக்காது.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கு, குறைந்த வருவாய் பிரிவினரின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் ரூபாய் வரை உள்ள நடுத்தர வருவாய் பிரிவினரின் குடும்பங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

சரிபார்ப்பது எப்படி?

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு மானியம் வந்ததா என சரிபார்க்க, ஆவாஸ் யோஜனா இணையதளத்தைப் பார்க்க வேண்டும். https://pmaymis.gov.in/. அதன் பிறகு, 'Search Beneficiary' என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து 'Search By Name' என்ற வசதியில் சென்று, உங்கள் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் பெயரைப் போலவே உருவாக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் பட்டியல் தோன்றும். அந்தப் பட்டியலில் உங்களுடைய பெயரைச் சரிபார்க்கலாம்.

புகாருக்கு

மானியம் வராத விவசாயிகள் Pradhan Mantri Awas Yojana (Urban) Ministry of Housing and Urban Affairs Nirman Bhawan, New Delhi-110011 என்ற முகவரிக்கு புகார் அனுப்பலாம். அல்லது 011-23063285, 011-23060484 என்ற லேண்ட்லைன் நம்பரைத் தொடர்புகொள்ளலாம். அல்லது pmaymis-mhupa@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிலும் புகாரைப் பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க...

இதைச் செய்யாவிட்டால் உங்கள் PAN Card முடக்கப்படும்!

வெண்ணெயில் ஸ்டார்ச் கலப்படம்- கண்டுபிடிப்பது எப்படி?

English Summary: Rs 2.67 lakh grant to build a house - Instructions for obtaining!
Published on: 22 February 2022, 10:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now