நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 May, 2022 11:16 AM IST

10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றத் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தத் தகவல் உண்மைதானா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

உங்கள் வங்கிக்கணக்கில் உடனடியாக வெறும் 10,100 ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தால் 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பலரும் 10 ஆயிரம் ரூபாயை சேகரித்து, வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். அதேநேரத்தில் ஒரு சிலர், 10 ஆயிரம் ரூபாய்க்கு, ரூ.30 லட்சம் கிடைக்குமா என பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இது பொய்யான தகவல் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறிந்து தகவல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வங்கிக் கணக்கில் 10,100 ரூபாய் செலுத்தினால் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என பரவி வரும் தகவல் பொய்யானது என பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து PIBவெளியிட்டுள்ள செய்தியில், 10,100 ரூபாய் செலுத்தினால் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என இந்திய அரசின் பேரில் பரவி வரும் கடிதம் போலியானது. மக்களிடம் பணம் பறிக்க அரசு அமைப்புகளின் பெயரை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. இதுபோன்ற மோசடி கும்பல்கள் பரப்பு செய்திகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

ஊறவைத்த முந்திரியின் எக்கச்சக்க நன்மைகள்!

வாத நோய்க்கு வித்திடும் உருளைக்கிழங்கு- மக்களே உஷார்!

English Summary: Rs 30 lakh for 10 thousand rupees?
Published on: 09 May 2022, 08:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now