Others

Friday, 13 January 2023 06:44 PM , by: T. Vigneshwaran

Smart TV

பிளிப்கார்ட்டில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிக் சேவிங் சேல் தொடங்க உள்ளது. ஜனவரி 15 முதல் 20 ஆம் தேதி வரையில் இந்த விற்பனை நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு தற்போது முன்னதாகவே ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமாக TCL நிறுவனத்தின், துணை நிறுவனமான iFFALCON ஸ்மார்ட் டிவிக்கு நல்ல ஆஃபர் வந்துள்ளது.

TCL என்பது உலகளவில் டிவி மார்க்கெட்டில் முன்னனி இடத்தில் உள்ள கம்பெனியாகும். இந்தியாவில் TCL கம்பெனி, iFFALCON துணை நிறுவனங்களின் தயாரிப்புகள், டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள் கிடைக்கின்றன. கூகுளின் ஆண்ட்ராய்டு சான்றிதழ் பெற்ற டிவிகள் இவற்றில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், iFFALCON F53 டிவி மிகக்குறைந்த விலையில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

விலை விவரம்:

iFFALCON டிவியின் அசல் விலை: 26,990

தற்போதைய விற்பனை விலை: 10,499

கூடுதல் தள்ளுபடி: -1,500

வங்கி கார்டுகள் சலுகை 10%: - 900

மொத்தம்: 8,099

சிறப்பம்சங்கள்:

iFFALCON டிவியில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், HDR டிஸ்ப்ளே, கூகுள் அசிஸ்ட்டெண்ட், மைக்ரோ டிம்மிங், டால்பி ஆடியோ, 16W ஸ்பீக்கர், குரோம்காஸ்ட், ப்ளூடூத், வைஃபை என பல்வேறு அம்சங்கள் உள்ளன. டிவியின் பக்கவாட்டில் 2 HDMI, 1 USB, கேபிள் டிவிக்கான பின், ஆடியோ ஜேக் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 1 வருட வாரண்டி உள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக 999 செலுத்தி 3 வருட முழுமையான பாதுகாப்பு பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதலாக, வாடிக்கையாளர்கள் 40 பிளிப்கார்ட் சூப்பர் நாணயங்களைச் செலுத்துவதன் மூலம் பிளஸ் மெம்பர்ஷிப்பிற்கு பதிவு செய்யலாம், இது அவர்களுக்கு பிக் சேவிங்ஸ் டேஸ் ஆஃபருக்கான ஆரம்ப அணுகலை வழங்குகிறது. Flipkart Big Savings Days விற்பனையின் போது வாங்குவதற்கு Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் பயனர்கள் 5 சதவீத கேஷ்பேக் பெறலாம். சிட்டி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறுவார்கள். Flipkart இன் பிக் சேவிங் டேஸ் நிகழ்வின் போது 12AM, 8AM மற்றும் 4PM மணிக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும்.

மேலும் படிக்க:

குழந்தைகளுக்கான பான் கார்ட், விண்ணப்பிக்க எளிய வழி

பாரம்பரிய நெல் வகைகளில் இத்தனை மருத்துவ குணங்களா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)