மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 April, 2023 1:40 PM IST
Self starters

சொந்தமாக தொழில் தொடங்குவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவோர் போன்ற தொழில்முனைவோருக்கு ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா ஒரு அற்புதமான அறிவுரையை வழங்கியுள்ளார்.

பிர்லா அறிவுரை

தொழில் தொடங்குவோருக்கு ரிஸ்க் எடுக்கும் திறன் மட்டுமல்லாமல், நல்ல வழிகாட்டுதலும் தேவை. அவ்வகையில், முன்னணி தொழிலதிபரும், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவருமான குமார் மங்கலம் பிர்லா, தொழில் முனைவோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், தொழில் தொடங்குவோர் உடனடி வெற்றியை எதிர்பார்க்காமல் நீண்டகால பார்வையுடன் தொழில் தொடங்க வேண்டும் என்று குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது அவர் தனது கருத்துகளையும், அறிவுரையையும் பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்வில் குமார் மங்கலம் பிர்லா பங்கேற்று பேசியபோது, நீண்டகால பார்வையை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நீண்ட காலத்தில் நீளவாக்கில் வெற்றிகள் கிடைக்கும் என நினைத்துக் கொள்ளுங்கள். லட்சியம் கொண்ட இளைஞர்களுக்கு இது எளிதல்ல. ஆனால், நான் சொல்வதை நம்புங்கள். நீண்டகாலப் பார்வை வைப்பது உதவும். பெரிய வெற்றிகளை அடைவதற்கு நேரமும், பொறுமையும் தேவை என்பதை பெரிய தலைவர்கள் அறிவார்கள்.

மாணவர்கள் எப்போதும் காலத்துக்கு முன்பாக திட்டமிட வேண்டும். அனைவருக்கும் ஆதரவு நிச்சயமாக தேவை. யாருமே தனியாக வெற்றிபெற முடியாது என்று பேசினார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் பிர்லாவின் பங்களிப்புக்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடந்த மாதம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

சொந்தமாக தொழில் தொடங்குவோருக்கு ஆனந்த் மஹிந்திராவின் அறிவுரை!

அதிக வட்டி தரும் டிஜிட்டல் FD திட்டம்: இதோ சிறப்பு அம்சங்கள்!

English Summary: This is Important for self-starters: advice from Birla!
Published on: 20 April 2023, 01:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now