Others

Saturday, 03 July 2021 10:56 AM , by: T. Vigneshwaran

சென்னை பல்கலைக்கழகம் 2021-22 கல்வி ஆண்டில் அதன் உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏழை மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இளங்கலை படிப்புகளில் சேர தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்படி சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இரண்டு மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 2010-11 முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி வருகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், தந்தையை இழந்த  குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகளுக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை கோரும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்” என பல்கலைக்கழகத்தின் பதிவாளர் என்.மதிவாணன் கூறியுள்ளார்.

ஆன்லைன் விண்ணப்ப படிவம் மற்றும் இந்த திட்டத்தின் விவரங்கள்  பல்கலைக்கழக வலைத்தளமான http://www.unom.ac.in இல் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர உற்சாகமாக இருக்கும் மாணவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஆன்லைன் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது.

மேலும் படிக்க:

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

ஒரு குண்டுபல்புக்கு 2.5 லட்சம் மின்கட்டணம்- அதிர்ச்சியில் உறைந்த மூதாட்டி!

தமிழகத்தில் 50 லட்சம் பேரின் ஆதார் தகவல்கள் திருட்டு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)