மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 December, 2021 7:45 PM IST
Emergency Fund

எதிர்பாராத நெருக்கடியின் போது அத்தியாவசிய தேவைகளை சமாளிக்க உதவும் அவசரகால நிதியின் (Emergency fund) முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக கொரோனா பாதிப்பால் உண்டான பொருளாதார பாதிப்பு இந்த நிதியின் தேவையை தெளிவாக உணர்த்தியது. அவரசகால நிதியை உருவாக்கும் வழிகள், எவ்வளவு தொகையை சேமிக்க வேண்டும், இந்த நிதியை எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் போன்ற விஷயங்களும் வல்லுனர்களால் வலியுறுத்தப்படுகின்றன.

வேலையிழப்பு (Unemployment)

எதிர்பாராத தருணங்களில் செலவுகளை சமாளிப்பதற்கு என சேமிக்கப்படும் அவசரகால நிதியை சரியான தருணங்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலையிழப்பு ஏற்பட்டு மாத வருமானம் நின்று போக்கும் நிலையில் அவசரகால நிதியை நாடலாம். ஊதியம் குறைப்பு போன்ற நிலையிலும் இந்த நிதியை பயன்படுத்தலாம்.

மருத்துவ செலவுகள் (Medical Expenses)

எதிர்பாராத மருத்துவ செலவுகள் நிச்சயம் பொருளதார நோக்கில் சுமையாக அமையலாம். அதிலும் போதிய மருத்துவ காப்பீடு இல்லாத நேரங்களில் இன்னும் சுமையாக மாறலாம். இது போன்ற தருணங்களில் கைகொடுப்பதற்காகவே அவசரகால நிதி சேமிக்கப்படுகிறது.

வாகன செலவு (Vehicle Expenses)

பணி நிமித்தமாக வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிர்பாராத காரணங்களால் வாகன பழுது ஏற்பட்டு அதிக தொகை தேவைப்பட்டால் அவசரகால நிதியை எடுத்துக்கொள்ளலாம். இதே போல, பழுது காரணமாக வீட்டில் உள்ள முக்கிய உபகரணங்களை மாற்றும் தேவை இருந்தாலும் இந்த நிதியை நாடலாம்.

உண்மையான தேவை (Need)

எதிர்பாராத நெருக்கடி பலவிதங்களில் ஏற்படலாம் என்றாலும், அவை எல்லாவற்றுக்கும் அவசரகால நிதியில் கைவைக்க கூடாது. அந்த நெருக்கடி அத்தியாவசிய தேவை சார்ந்ததாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். தவிர்க்க கூடிய செலவுகள், வாழ்வியல் தேவைக்கான செலவுகளுக்கு இந்த நிதியை பயன்படுத்தக்கூடாது.

ஆய்வு அவசியம்

நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தால் அதற்கான காரணங்களை ஆய்வு செய்து, தவிர்க்க கூடிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இதன் வாயிலாக உண்மையான தேவையை எளிதாக அறியலாம். சரியான தருணங்களில் நிதியை பயன்படுத்தும் அதே நேரத்தில் மீண்டும் அந்த நிதியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க

தினமும் முதலீடு 44 ரூபாய் மட்டுமே: இலட்சத்தில் சம்பாதிக்க எல்.ஐ.சி.யின் சூப்பர் பாலிசி!

பென்சன் வாங்குவோருக்கு வெளியானது சூப்பர் அறிவிப்பு!

English Summary: When can emergency funds be used?
Published on: 06 December 2021, 07:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now