மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 March, 2022 10:32 AM IST

இன்றைய முதலீடு எதிர்காலத்திற்கான சேமிப்பு என்பதுதான் உண்மை. அதனால் நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்வது மிக மிக அவசியம். அந்த வகையில், ஐந்தே ஆண்டுகளில் நீங்கள் ரூ.15 லட்சம் சம்பாதிக்க உதவும் சூப்பர் திட்டம் ஒன்று உள்ளது. அதுதான் NSC திட்டம் !

குறிப்பாக நாம் சரியான இடத்தில் பணத்தை முதலீடு செய்தால்தானே அதிகமாக லாபம் ஈட்ட முடியும். அதற்கு அங்கும், இங்கும் அலையத் தேவையில்லை. தபால் அலுவலகம் போனாலே போதும். தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்புத் திட்டங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். இதில் சேமிக்கும் பணத்துக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது.

எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஏன், மைனர் பெண்கள் மற்றும் ஆண்கள்கூட, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இணைப்புக் கணக்காகவும் இதில் முதலீடு செய்யலாம்.

தற்போதைய நிலையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் 6.8 சதவீத வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ஐந்தே ஆண்டுகளில் உங்களுடைய கையில் ரூ.13.89 லட்சம் இருக்கும்.
ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் வரிச் சலுகை பெறலாம்.இத்திட்டத்தின் முதிர்வு காலத்துக்கு முன்னரே பணத்தை எடுக்க சில விதிமுறைகள் உள்ளன. 

முதலீடு செய்தவர் இறந்துவிட்டாலோ, நீதிமன்ற தீர்ப்பின் பெயரிலோ எடுக்கலாம். டெபாசிட் செய்த முதல் ஆண்டே இந்த சான்றிதழை ரீடீம் செய்வதாக இருந்தால் அடிப்படை வட்டி மட்டுமே கிடைக்கும். அதேபோல, ஒன்று முதல் மூன்று ஆண்டுகளில் ரீடீம் செய்வதாக இருந்தால் தபால் நிலைய சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் வழங்கப்படும்.

மேலும் படிக்க...

அஞ்சலகத் திட்டங்களுக்கு வட்டித்தொகை செலுத்தப்படாது!

இதைச் செய்யாவிட்டால் ரூ.1000 அபராதம்!

English Summary: You can earn Rs 15 lakh in 5 years !
Published on: 16 March 2022, 10:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now