மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 March, 2023 5:50 PM IST
A kilo of potato is 500 rupees.. Do you know about this black potato!

பொதுவாக, விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரை பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்வார்கள். ஆனால் பீகாரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் புதுமையாக யோசித்து கருப்பு உருளைக்கிழங்கு பயிரிட்டார்.

இந்த கருப்பு உருளைக்கிழங்கு பயிர் சாகுபடியுடன், இந்த விஷயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது மற்றும் விவாதப் பொருளாக மாறியது. இப்பயிர் பயிரிடுவது மட்டுமின்றி, இந்த விவசாயி அதிக லாபமும் பெற்று வருகிறார். இப்போது இது தொடர்பான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த கருப்பு உருளைக்கிழங்கு பயிர் சாகுபடியுடன், இந்த விஷயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது மற்றும் விவாதப் பொருளாக மாறியது. இப்பயிர் பயிரிடுவது மட்டுமின்றி, இந்த விவசாயி அதிக லாபமும் பெற்று வருகிறார். இப்போது இது தொடர்பான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த கருப்பு உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயியின் பெயர் ஆஷிஷ் சிங். இந்த விவசாயி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த விவசாயிக்கு தினந்தோறும் யூடியூப் பார்க்கும் பழக்கம் உள்ளது. இந்த கருப்பு உருளைக்கிழங்கைக் காணும்போது இந்த விவசாயி ஏதாவது புதுமையாக செய்ய எண்ணினார். அப்போதிருந்து, இந்த கருப்பு உருளைக்கிழங்கை பயிரிடுவதற்கான வழிகளைத் தேடி, இந்த பயிரை வளர்த்து வருகிறார் இந்த விவசாயி.

 

பொதுவாக, இந்த கருப்பு உருளைக்கிழங்கு பெரும்பாலும் அமெரிக்காவின் ஆண்டிஸ் பகுதியில் பயிரிடப்படுகிறது. பீகாரைச் சேர்ந்த இந்த விவசாயி இந்தப் பயிரை வளர்க்க அமெரிக்காவிலிருந்து கருப்பு உருளைக்கிழங்கு விதைகளை ஆர்டர் செய்துள்ளார். பயிர் வளர ஒரு கிலோ விதை ரூ.1500 விலையில் 14 கிலோ விதைகளை வாங்கினார். இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட விதைகளை பீகாரின் திகாரி தொகுதி குல்ரியாசாக் கிராமத்தில் பயிரிட்டார்.

இந்த கருப்பு உருளைக்கிழங்கும் இந்த மார்ச் மாதத்தில் முதல் விளைச்சலைப் பெற்றது. இந்த விவசாயி நவம்பர் மாதத்தில் விதைகளை விதைத்து, 120 நாட்களுக்குப் பிறகு நேற்று மார்ச் 13 அன்று அறுவடை செய்யப்பட்டது. பயிர் நடவு செய்த போது, ​​200 கிலோ மகசூல் கிடைக்கும் என, எதிர்பார்த்த விவசாயி, பருவநிலை காரணமாக, 120 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்தது.

இந்த கருப்பு உருளைக்கிழங்கை வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.300-500க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயியை உத்வேகம் கொண்டு, மாநிலத்தில் உள்ள மற்ற விவசாயிகளும் இந்த கருப்பு உருளைக்கிழங்கை பயிரிட முயற்சிக்கின்றனர். இந்த கருப்பு உருளைக்கிழங்கின் தேவையும் அதிகரித்துள்ளது. தற்போது இந்த விவசாயி சில நிலங்களில் மட்டுமே இந்த பயிரை பயிரிட்டு வருகிறார். இப்போது அதை மேலும் விரிவுபடுத்த நினைக்கிறார்.

மேலும் படிக்க

Chilli Zone: 'மிளகாய் மண்டலம்' அமைக்கும் நடவடிக்கைக்கு விவசாயிகள் பாராட்டு!

இந்தியாவின் முதல் மித்ரா பூங்கா விருதுநகரில் திறப்பு!

 

English Summary: A kilo of potato is 500 rupees.. Do you know about this black potato!
Published on: 23 March 2023, 05:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now