நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 March, 2022 10:47 PM IST
Actress Devayani who bought barren land and created a garden

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியின் செயல் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. நடிகை தேவயானி அவர்கள் ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு பக்கத்தில் மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்திருந்த பிளாட்களை வாங்கி அதில் விவசாயம் செய்து உள்ளார். நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.

தரிசு நிலத்தை வாங்கிய தேவயானி (Devayani who bought barren land)

தேவயானி தம்பதி அடிக்கடி தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.மேலும், இவர்கள் அருகிலுள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி அவர்கள் ஊருக்கு சென்று தங்கள் விவசாய நிலங்களை குழந்தைகளுடன் பார்த்து வருவார்கள். இந்த நிலையில் அவர்களது தோட்டத்துக்கு அருகே இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை ஃப்ளாட் ஆக மாற்றியுள்ளனர்.

தோட்டம் (Garden)

இதை அறிந்த தேவயானி அந்த நபரிடம் இரண்டு ஏக்கர் வீட்டு மனைகளையும் விலைக்கு வாங்கியுள்ளார். பின் அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது இரண்டு ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார். தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டுமல்லி பூத்து குலுங்குகிறது. இதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. தற்போது திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்த தேவயானி குடும்பத்தினர் தங்களின் மல்லி தோட்டத்தை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

பகுதி மக்கள் பாராட்டு (Praise For People)

விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில் நடிகை தேவயானியின் இந்த செயல் குறித்து அப்பகுதி விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க

நெல் கொள்முதலில் வாங்கிய இலஞ்சத்தை திருப்பி தாங்க! விவசாயிகள் கோரிக்கை!

வாழை வைத்தால் வரம் தான்: விவசாயியின் வெற்றிப் பேச்சு!

English Summary: Actress Devayani who bought barren land and created a garden!
Published on: 31 March 2022, 10:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now