மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 September, 2021 8:37 PM IST
Organic Food

பொறியியல் துறையில் பி.எச்டி படிப்பு முடித்தாலும் விவசாயத்தின் மீது தீராத காதல் கொண்டு, மதுரை திருமங்கலத்தில் 300 விவசாயிகளை ஒருங்கிணைத்து வாகை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக நபார்டு அங்கீகாரம் பெற்று பதிவு செய்துள்ளார் வாகைக்குளத்தைச் சேர்ந்த ராம்குமார்.

படிப்பும் தொழிலும்

திருமங்கலத்தில் 100 விவசாயிகளை கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் முதலில் ஒருங்கிணைத்தோம். தற்போது 300 விவசாயிகள் இணைந்துள்ளனர். மானாவாரி வேளாண் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் ரூ.10 லட்சத்திற்கு கருவிகளை வாங்க வேளாண் பொறியியல் துறை உதவியது. உதவி பொறியாளர் காசிநாதன் வழிகாட்டினார். மாட்டுத்தீவனம் தயாரிக்கும் இயந்திரம், மாவு, ஈரமாவு அரைக்கும் இயந்திரம், சிறுதானியங்கள், பாசிப்பயறு, நவதானியங்களை சுத்தம் செய்யும் இயந்திரம் வாங்கினோம்.
திருமங்கலத்தில் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, துவரை சாகுபடியாகிறது. முதற்கட்டமாக விவசாயிகளுடன் பேசி 2000 ஏக்கர் மக்காச்சோளத்தை வாங்கி கொண்டிருக்கிறோம்.

அறுவடை செய்த வயலுக்கே சென்று நாங்களே எடையிட்டு சாக்கில் எடுத்து வருகிறோம். இதற்கு விவசாயிக்கு சாக்கு, போக்குவரத்து செலவு, கமிஷன் என ஒரு காசு கூட செலவில்லை. எடையும் துல்லியமாக அளவிடுகிறோம். இதனால் விவசாயிகளுக்கும் எங்களுக்கும் நிறைவான லாபம் கிடைக்கிறது. இந்த மக்காச்சோளத்துடன் மற்ற பொருட்களை கலந்து கலப்படமில்லாத மாட்டுத்தீவனம் தயாரித்து கிலோ ரூ.25க்கு விற்கிறோம்.

மசாலா பொடி, அரிசி, கோதுமை மாவை அரைத்து கலப்படமின்றி விற்பதால் சுற்றியுள்ள மக்கள் விரும்பி வாங்குகின்றனர். வங்கியோடு இணைந்து விவசாயிகளுக்கு கறவைமாட்டு கடன், பயிர்க்கடன் வாங்கித் தருகிறோம். என்னென்ன விதைகள் தேவை என விவசாயிகளிடம் கேட்டறிந்து மொத்த விலைக்கு வாங்கி லாப நோக்கமின்றி விற்கிறோம். அரசின் மானிய திட்டங்களை ஒவ்வொரு விவசாயியிடமும் தெரிவிக்கிறோம்.

கோடை உழவு

சமீபத்தில் கோடை உழவு மானியத் திட்டத்தில் வாகைக்குளம் கிராமத்தில் மட்டும் 100 விவசாயிகள் பயன்பெற்றனர். விவசாயத் தொழில்நுட்பங்களையும் கற்றுத் தருகிறோம். விவசாயிகள் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கு நாங்கள் உதாரணம் என்றார்.

தொடர்புக்கு - 99524 73111

மேலும் படிக்க

சம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்!

காய்கறி உரத்தில் கலப்படம்: கவலையில் விவசாயிகள்!

English Summary: Farmers' achievement is unadulterated food: Amazing Ramkumar!
Published on: 29 September 2021, 08:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now