நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 October, 2018 2:33 AM IST

நீங்கள் எந்த ஒரு வாழ்க்கை தொழிலை தேர்ந்தெடுத்தாலும் அது எளிதாக இருக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. அதில் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் வாழும் ஜெயேஷ் பாய், மோகன் பாய் படேல் கதையும் இதைப் போன்றதாகும். ஆரம்பத்தில் ஜெயேஷ் வியாபாரம் செய்து வந்தார். ஆனால் விவசாயத்தின் மீது அவருக்கு இருந்த அளவற்ற ஆர்வம் காரணமாக வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு விவசாயம் செய்வதற்கு வந்தார். அதற்காக அவர் தரிசு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்ய தொடங்கினார். அவரை சுற்றி உள்ளவர்கள் அவர் தரிசு நிலத்தில் எப்படி விவசாயம் செய்கிறார் என்பதை காண்பதற்கு ஆவலோடு இருந்தார்கள். தரிசு நிலத்தில் ஜெயேஷ் கரும்பு மற்றும் பேரீச்சை பயிரிட்டார்.

விவசாயத்தின் மீது அவருக்கு இருந்த அதித ஆர்வம் மற்றும் அவரது தளரா மன உறுதி காரணமாக அவர் விவசாயத்தில் வெற்றி பெற்றார். அதன் விளைவாக ஒரு புதிய வெற்றிக் கதையை அவர் எழுதினார்.

பாரம்பரிய விவசாய முறைகளை தவிர்த்து விட்டு, புதிய விஞ்ஞான விவசாய முறைப்படி குறைந்த செலவில் கரும்பு மற்றும் பேரீச்சை பயிரிட்டார். தரிசு நிலத்தை நல்ல முறையில் பண்படுத்தினார். மண் பரிசோதனை செய்தார். அதன் பயனாக ஜெயேஷ் பாய் விவசாயத்தில் அதிக இலாபம் அடைந்தார்.

வெளிநாட்டிலிருந்து 12 வகையான திசு வளர்ப்பு பேரீட்சை கன்றுகளை இறக்குமதி செய்து நடவு செய்தார். ஒரு ஏக்கரில் 70 - 80 பேரீட்சை  கன்றுகளை நடவு செய்தார். அவைகளில் இருந்து மரம் ஒன்றுக்கு 70 -80 கிலோ கிராம் பேரீச்சம் பழங்கள் கிடைத்தன. குஜராத் மாநிலத்தில் பேரீட்சை மரங்களில் இருந்து 18 மாதங்களில் பழங்களை அறுவடை செய்துள்ள முதல் விவசாயி ஜெயேஷ் பாய் ஆவர். சந்தையில் நல்ல விலை கிடைப்பதற்காக அவர் தனது பேரீச்சம் பழங்களை நல்ல முறையில் தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறர். விவசாயத்தில் இரசாயனங்களின் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு  அவர்  இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறார். அதன் விளைவாக அவரது இரசாயனங்களின் பயன்பாடு 25% குறைந்துள்ளது.  வரலாறு காணாத இவரது விவசாய வெற்றிக்காக இவருக்கு ஆத்மா (ATMA) விருது வழங்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் பேரீச்சை சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு இவருக்கு கன்று ஒன்றுக்கு ரூபாய் 1250 வீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

 

English Summary: Farming in fallow land
Published on: 05 October 2018, 02:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now