பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 November, 2023 1:55 PM IST
Hasmukh Shah award

ICAR-CMFRI-யின் பவளப்பாறைகள் பற்றிய ஆராய்ச்சி 2023 ஆம் ஆண்டுக்கான ஹஸ்முக் ஷா நினைவு விருதை வென்றுள்ளது. இந்த விருதினை பெறுவதற்கு காரணமாக ICAR-CMFRI-யின் ஆல்வின் ஆண்டோவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஹஸ்முக் ஷா நினைவு விருது, குஜராத் சூழலியல் சங்கத்தால் நிறுவப்பட்டது மற்றும் கச்சனார் அறக்கட்டளை நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் நிலவும் சுற்றுச்சூழல், தொழில்நுட்ப பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், அதனை வெகுவாக குறைப்பதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கும் நபர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தான் 2023 ஆம் ஆண்டிற்கான ஹஸ்முக் ஷா நினைவு விருதினை ICAR-CMFRI (Central Marine Fisheries Research Institute) யின் ஆல்வின் ஆன்டோ வென்றுள்ளார். லட்சத்தீவுகளில் உள்ள பவளப்பாறைகளின் மீள்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கையினால் உண்டாகும் அச்சுறுத்தல்களின் பாதிப்பு குறித்த தனது ஆராய்ச்சி முடிவினை விருதிற்காக சமர்பித்து இருந்தார் ஆல்வின் ஆண்டோ. இவரின் ஆராய்ச்சி முடிவுகள் அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்ற நிலையில் ஹஸ்முக் ஷா நினைவு விருதை 2023 ஆல்வின் வென்றுள்ளார்.

ஆல்வின் ஆன்டோ, தீவிர கடல் ஆர்வலர் மற்றும் டைவிங் பயிற்றுனர்களின் தொழில்முறை சங்கத்தின் மூலம் சான்றளிக்கப்பட்ட டைவ் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் மீது குறிப்பிட்ட கவனம் செலுத்தி, ஆழ்கடலில் நீருக்கடியில் பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார்.

ஹஸ்முக் ஷா நினைவு விருதை வென்ற இளம் தொழில் நிபுணரான ஆல்வின் ஆன்டோவிற்கு விருதுடன், ₹2 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் அங்கீகாரச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளில் உள்ள பவளப்பாறைகளின் பின்னடைவை மையமாகக் கொண்ட அவரது ஆய்வு முடிவுகள் காலநிலை மாற்றம் மற்றும் மனிதனால் தூண்டப்பட்ட பல்வேறு காரணிகளால்  சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர்.

ஹஸ்முக் ஷா குஜராத் சூழலியல் ஆணையத்தின் (GES- Gujarat Ecology Society) முதல் தலைவராக இருந்தார். அவர் குஜராத் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெசர்ட் எக்காலஜியின் (GUIDE- Gujarat Institute of Desert Ecology) நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.

அவரது வழிகாட்டுதல்களில் GES, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய 110 திட்டங்களை நிறைவு செய்துள்ளது. இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் தனியார் மயமாக்கப்படுவதற்கு முன்பு அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் காண்க:

சூப்பர்! பாதி விலையில் வெங்காயம் வாங்க தமிழக அரசு நடவடிக்கை

பள்ளி மாணவர்களுக்கு நவ.10 வரை விடுமுறை நீட்டிப்பு- இதான் காரணமா?

English Summary: ICAR-CMFRI Alvin Anto coral reef research bagged Hasmukh Shah award
Published on: 06 November 2023, 01:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now