அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 December, 2023 2:57 PM IST
Gopina Krishna Prasad

விவசாயத்தில் லாபம் பார்க்க முடியாமல் தவித்து வந்த தந்தைக்கு உதவுவதற்காக தான் செய்து வந்த பத்திரிக்கையாளர் வேலையை விட்டுவிட்டு, பசுமைக்குடில் மூலம் திறம்பட வேளாண் பணிகளை மேற்கொண்டு சமீபத்தில் விவசாயிகளுக்கான மில்லினியர் விருதினையும் வென்றுள்ளார் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த கோபினா கிருஷ்ண பிரசாத்.

உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு கிரிஷி ஜாக்ரான் ஊடக நிறுவனம் சார்பில் MFOI விருது வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியிலுள்ள சாணக்யபுரியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் MFOI விருது வழங்கும் நிகழ்விற்கான கோப்பை மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஒன்றிய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து MFOI விருது வழங்கும் நிகழ்வுக்கு ICAR- KVK தனது ஆதரவினை வழங்க, இந்தியா முழுவதுமிருந்து பலர் விருதுக்கு விண்ணப்பித்தனர்.

கடந்த டிசம்பர் 6,7,8 டெல்லியில் விருது வழங்கும் விழா நடைப்பெற்ற நிலையில், ஆந்திராவினை சேர்ந்த விவசாயி மில்லினியர் விருதினர் வென்றது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஊடகவியல் துறையில் ஒரு பத்திரிக்கையாளராக வேலைப்பார்த்து வந்த நிலையில், விவசாயத்திற்கு திரும்பி அதில் வெற்றி கண்டது தான்.

கோபினா கிருஷ்ண பிரசாத் (47) ஆந்திரா மாநிலம் எச்சர்லா மண்டலத்தில் உள்ள கொங்கரம் கிராமத்தில் விவசாயக் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர். பிரசாத்தின் தந்தை ராம்பாபு மற்றும் மூத்த சகோதரர் நரேந்திர குமார் ஆகியோர் கடந்த 30 ஆண்டுகளாக பாரம்பரிய விவசாய முறையில் 20 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இருப்பினும், அவர்களால் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான், 2015 ஆம் ஆண்டில், பிரசாத் தனது பார்த்து வந்த பத்திரிகையாளர் வேலையை விட்டுவிட்டு, மாவட்டத்தில் முதல் முறையாக இயற்கை விவசாயம் மற்றும் பசுமைக்குடில் தொழில்நுட்பத்தின் மூலம் தர்பூசணி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் பூக்களை பயிரிடத் தொடங்கினார். அவர் தனது பண்ணைக்கு அருகில் ஆழ்துளை கிணறு தோண்டி நீர் பாசன வசதியை மேம்படுத்தினார்.

மற்ற விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையினை பிரசாத்தும் சந்தித்துள்ளார். இதிலிருந்து மீள, அனைத்து வகையான விவசாய பணிகளையும் இயந்திரமயமாக்கல் கொண்டு மேற்கொள்ள ஆரம்பித்தார். இயற்கை விவசாயத்தின் மூலம் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் நெல் சாகுபடியையும் அவர் தொடங்கினார்.

பிரசாத் தான் மேற்கொண்ட வேளாண் பணிகளுக்கு, அமடலாவலசை கிரிஷி அறிவியல் கேந்திரா விஞ்ஞானிகள் கே.பாக்யலட்சுமி, எஸ்.நீலவேணி, எஸ்.கிரண்குமார், வி.ஹரிகுமார் மற்றும் பி.மௌனிகா ஆகியோரின் ஆதரவும், ஆலோசனைகளும் பெரிதும் உதவியுள்ளன.

பிரசாத்தின் முயற்சிகளைக் கவனித்த, மூத்த விஞ்ஞானியும், க்ரிஷி விக்யான் கேந்திராவின் திட்ட ஒருங்கிணைப்பாளருமான பாக்யலட்சுமி, மில்லினியர் விவசாயிக்கான விருதுக்கு பிரசாத்தின் பெயரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICAR) பரிந்துரைத்துள்ளார். அதைத் தொடர்ந்து டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்வில் மில்லியனர் விவசாயி விருதினை வென்றார். தற்போது பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read more:

பிஎம் கிசான்- ரூ.6000 பெற விவசாயிகளுக்கு சூப்பர் சான்ஸ்!

கனமழையில் சிக்கிய நெல்லை மாவட்ட விவசாயிகளே அடுத்த சில நாள் இதை செய்யுங்க!

English Summary: MFOI Awardee farmer Gopina Krishna Prasad earns lakhs from Greenhouse
Published on: 21 December 2023, 02:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now