Success stories

Monday, 01 October 2018 05:43 PM

மாடி தோட்டத்தில் நெல் சாகுபடி

வீட்டு மாடி தோட்டத்தில் காய்கறி கீரைகள் வளர்ப்பு பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். நெல் சாகுபடி செய்வது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

திருவனந்தபுரத்தில் வாழும் திரு. ரவீந்திரன் இதையே செய்து சாதித்து உள்ளார். அவரின் சாதாரண வீட்டில் வீட்டு தோட்டம் மட்டுமன்றி மாடியிலேயே நெல் வளர்க்கிறார்.

இதற்கு 300 சதுர அடி மாடி பயன்படுத்தி உள்ளார். மாடியில் உள்ள தொட்டிகள் அதிக பாரம் இருக்காமல் இருக்கவும், நீர் சேராமல் இருக்கவும் மாடியில் இருந்து கம்பிகள் மூலம் சப்போர்ட் கொடுத்து உள்ளார்.

150 மண் சட்டிகளில் நெல் பயிர் வளர்க்கிறார். அவருக்கு இதன் மூலம் 32 கிலோ கிடைக்கிறது. வருடம் 3 தடவை சாகுபடி செய்கின்றார். அதிகம் நீர் தேவை இல்லை என்கிறார் இவர். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நீர் விடுகிறார். நீர் ஆவி ஆகாமல் இருக்க அசோலா பயன்படுத்துகிறார். இவர் சாகுபடி செய்துள்ள ரகங்கள் – பிரதியுஷா மற்றும் உமா

இவர் அரசாங்கத்திடம் இருந்தும் பல தனியார் நிறுவனங்களிடமிருந்தும் மாடித் தோட்ட விருதுகளைப்  பெற்றுள்ளார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)