Success stories

Tuesday, 24 May 2022 10:17 PM , by: Elavarse Sivakumar

ஒரு நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 420 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, அந்த நாடு எது எனத் தெரியுமா? ஆம். இலங்கைதான்.

 இந்தியாவின் அண்டைநாடான இலங்கை, ஏற்கெனவே மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, கடன்கள், அந்நிய செலாவணி நெருக்கடி என பல்வேறு பிரச்னைகளில் இலங்கை சிக்கியுள்ளது.

111 ரூபாய்

இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 82 ரூபாய் வீதம், அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPC) உயர்த்தியுள்ளது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 111 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.420

இதனால், இலங்கையில் பெட்ரோல் டீசல் விலை மிக மோசமாக உயர்ந்துள்ளது. இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 420 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 400 ரூபாயாகவும் உள்ளது. இது இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கு இலங்கை அரசிடம் போதிய பணம் இல்லை. இதற்காக இந்தியாவிடம் இருந்து கடன் கிடைக்கும் எனவும் இலங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதிகாலை 3 மணி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் ஏற்கெனவே பணவீக்கம் மிக மோசமாக உள்ளதால் சாதாரண மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே திணறி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

ஆதார் மூலம் வருமானம்… அடடே, சூப்பர் Offer?

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)