Success stories

Monday, 25 July 2022 09:19 PM , by: R. Balakrishnan

Small business - high profit

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த நண்பர்கள் ஆகாஷ் மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரும் இஞ்சினியரிங் முடித்து வேலை செய்து வந்தனர். 2020ஆம் ஆண்டில் கொரோனா நெருக்கடி காலத்தில் இருவருமே வேலை இழந்தனர். புதிதாக வேலை தேடுவதற்கு பதிலாக சொந்த தொழில் தொடங்க இருவரும் திட்டமிட்டனர்.

இறைச்சி பதப்படுத்துதல் (Meat processing)

தொழில் சார்ந்த சில புத்தகங்களை படித்தபின் தொழில் தொடங்கியே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். பின்னர் எந்த தொழில் தொடங்கலாம் என தேட தொடங்கினர். உள்ளூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறைச்சி பதப்படுத்துதல் பற்றி பயிற்சி வழங்கப்பட்டது. இதன் கீழ் இருவரும் பயிற்சி பெற்று இறைச்சி தொழில் தொடங்க முடிவு செய்தனர். இருவரின் சேமிப்பு தொகையில் இருந்து 25,000 ரூபாயை எடுத்து முதலீடு செய்தனர். 100 சதுர அடி இடத்தில் தொழிலை தொடங்கினர்.

தங்கள் நிறுவனத்துக்கு அபிடைட் (Apetitee) என பெயர் சூட்டினர். சிறியதாக தொடங்கிய இந்நிறுவனம் தற்போது மாதம் 4 லட்சம் ரூபாய் விற்றுமுதல் ஈட்டி வருகிறது. தொழில் வளர்ந்ததால் ஃபேபி கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து ஒரு ஆஃபரும் வந்தது.

அபிடைட் நிறுவனத்தில் 10 கோடி ரூபாய்க்கு பெரும்பாலான பங்குகளை ஃபேபி நிறுவனம் வாங்கியது. இதர பங்குகள் ஆகாஷ் மற்றும் ஆதித்யா இருவரிடமும் உள்ளது. அபிடைட் வழியாக புதிய தயாரிப்புகளை கொண்டுவரவும், புதிய கடைகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஃபேபி நிறுவனத்தின் இயக்குநர் ஃபஹத் சையது தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

தொழில் தொடங்க விருப்பமா? மானியத்துடன் உதவும் அரசின் திட்டங்கள்!

62 லட்ச ரூபாய் சம்பளத்தில் மிட்டாய் சாப்பிடும் வேலை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)